கழுத்தை நெரித்து.. சுவரில் தலையை மோதிய செம்மர கடத்தல் கும்பல்.. பரிதாபமாக உயிரை விட்ட சாந்தி பிரியா
செம்மர கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலியானார்
திருப்பத்தூர்: செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்த கும்பலுக்கும் புரோக்கருக்கும் நடந்த மோதலில் புரோக்கர் மனைவி சாந்திபிரியா உயிரிழந்தார். "சாந்திபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்துவிட்டனர்" என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
வாணியம்பாடி, ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், இவருக்கும் சாந்திப்பிரியா என்பவருக்கும் கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 6 வயதில் கோமதி என்ற பெண் குழந்தை இருக்கிறாள். சீனிவாசனுக்கும், அசோகன் என்பவருக்கும் செம்மரம் வெட்டும் தொழிலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சீனிவாசனின் நண்பர் அசோகன்.. ஆந்திராவுக்குச் சென்று செம்மரம் வெட்டிக் கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். செம்மரங்களை விற்றதில் கிடைத்த பணத்தை பங்கு பிரித்ததில் சீனிவாசனே அதிக பணத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்கு முன்னரும், 7 பேர் கொண்ட கும்பலுடன் அசோகன் செம்மரம் வெட்டிக் கடத்தி வருவதற்காக சென்றுள்ளார். ஆனால், செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்த பிறகு பேசிய பணத்தை 7 பேருக்கும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் சீனிவாசன். இதனால், இந்த கும்பல் சீனிவாசனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பலாக கணவனை தாக்குவதை கண்ட சீனிவாசனின் மனைவி சாந்திப்பிரியா குறுக்கே நுழைந்து சண்டையை தடுக்க பார்த்தார்.. ஆனால், அந்த கும்பல் நெருக்கி தள்ளியதில், அடிபட்டு அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்டவர்கரளை கைது செய்ய வலியுறுத்தினர். சாந்திபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இதனால், திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா, பழனி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதுடன், மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.மேலும் ஒடுகத்தூர் அருகே இந்தக் கும்பல் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளையும் போலீஸார் கைப்பற்றினர். கணவனின் தவறான செயலால், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications