போன் பாஸ்வேர்டை சிபிஐ கேட்கிறது.. என்ன ஆனாலும் கொடுக்க மாட்டேன்.. கார்த்தி சிதம்பரம் விடாப்பிடி
கார்த்தி சிதம்பரத்தின் போன் பாஸ்வேர்டை வாங்குவதற்கு கடந்த 2 நாட்களாக சிபிஐ முயன்று வருகிறது.
Recommended Video

சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் போன் பாஸ்வேர்டை வாங்குவதற்கு கடந்த 2 நாட்களாக சிபிஐ முயன்று வருகிறது. ஆனால் கார்த்தி என்ன நடந்தாலும் போன் பாஸ்வேர்ட் கொடுக்க மாட்டேன் என்றுள்ளார்.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து இருக்கிறது. தற்போது இவர் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார்.

சாப்பாடு பிரச்சனை
அவர் சாப்பாடுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். வெறும் தயிர் சாதமும், பழங்களும் மட்டுமே கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். வீட்டு சாப்பாடு வேண்டாம் என்று ஏற்கனவே நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடதக்கது.

போன்
இந்த நிலையில் சிபிஐ கார்த்தியுடன் அவரது போனை கேட்டு இருக்கிறது. அதில் முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்று சிபிஐ கூறியுள்ளது. மோசடியில் தொடர்பு உள்ளவர்களுடன் அவர் பேசிய குறிப்புகள் இருக்கலாம் என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது.

மாட்டேன்
இதற்கு கார்த்தி ''என்னுடைய போன் பாஸ்வேர்டை கொடுக்க முடியாது. அதில் என்னுடைய பர்சனல் புகைப்படங்கள் இருக்கிறது. மேலும் இவர் மோசடி நடந்ததாக சொல்வது 2008, நான் போனை வாங்கியது 2016ல். எனவே அதில் எந்த தகவலும் இருக்காது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் நாட்கள் வேண்டும்
இந்த நிலையில் சிபிஐ இவரை விசாரிக்க மேலும் கால அவகாசம் கேட்டு இருக்கிறது. கார்த்தியிடம் இருந்து தகவல்களை வாங்க முடியவில்லை என்றுள்ளனர். நிறைய விஷயங்களை விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று சிபிஐ இன்று நீதிமன்றம் வாதாடி இருக்கிறது. இப்போது 3 நாட்கள் கஸ்டடி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications