அழகு தமிழில் திட்டுங்க.. பரவாயில்லை.. ஆளுநர் தமிழிசை உருக்கம்.. 'அண்ணா விருது' பெற்றவருக்கு குட்டு
தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: யாரையாவது திட்டுவதாக இருந்தாலும் கூட அழகுத்தமிழில் மரியாதையாகத் திட்டுங்கள் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை துவக்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,தன்னை ஒருவர் ஒருமையில் திட்டியதை வேதனையுடன் குறிப்பிட்டார்.

விழாவில் பேசிய தமிழிசை, இரண்டு மாநிலத்தில் அவள் கவர்னராக இருக்கிறாள் என்று ஒருவர் சொன்னார். இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான காரியம். அதிலும் தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
துரதிஷ்ட வசமாக ஒருவர் என்னை ஒருமையில் பேசுகிறார். பேரறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர், இவளெல்லாம் இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநரா என்று கேட்கிறார். தயவு செய்து யாரையும் திட்டுவதாக இருந்தாலும் கூட மரியாதையாக அழகுத்தமிழில் திட்டுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
என் தமிழுக்கு மரியாதை உண்டு மரியாதையாக பேசவில்லை என்றால் நீங்கள் தமிழரே இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications