தஞ்சையிலிருந்து பிரிக்கப்படுமா கும்பகோணம்? 18 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஏப்ரல் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சி பிரமுகர்கள் சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரை பிரித்து திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உருவாகின.
2 ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு நாகையிலிருந்து பிரித்து மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கப்பட்டது.

எடப்பாடி ஆட்சியில் புதிய மாவட்டங்கள்
அத்துடன் நெல்லையிலிருந்து பிரித்து தென்காசி என்ற தனி மாவட்டமும், வேலூரை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு என்ற தனி மாவட்டமும், விழுப்புரத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி என்ற தனி மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

கும்பகோணம் தனி மாவட்டக் கோரிக்கை
அதே நேரத்தில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக அங்குள்ள 2 பெரிய நகரங்களாக கும்பகோணமும், பட்டுக்கோட்டையும் உள்ளன. இதில் கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதேபோல் பட்டுக்கோட்டையையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம்
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நகராட்சியாக இருந்த கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தேர்தலையும் நடத்தி முடித்துவிட்டது. இதற்கிடையே தங்கள் நீண்டநாள் விருப்பமான கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்
இதற்காக "கும்பகோணம் மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக் குழு" என்ற பெயரில் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போராட்டக்குழுத் தலைவராக வன்னியர் சங்க தலைவர்
இந்த போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர் தி.ஜோதிராஜ், அமமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளார் பொன்.த.மனோகரன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் அய்யப்பன், தேமுதிக மாவட்ட செயலாளர் கோ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications