காங்கிரசுக்கு ஒதுக்கிய தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக வெற்றி.. கூட்டணி தலைவர்கள் கொதிப்பு
தேனி: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக இன்று தேர்வானார். காங்கிரசுக்கு இந்த நகராட்சி ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தனித்து கைப்பற்றியுள்ளது.
ஆனாலும் திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர்கள் பதவிகளை ஒதுக்கியது.

கூட்டணி தர்மம் மீறல்
இவ்வாறு ஒதுக்கினாலும் கூட இன்று நடந்த மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் கூட்டணி தர்மம் பல இடங்களில் மீறப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி அல்லிநகரம் நகராட்சியிலும் கூட்டணி தர்மம் மீறப்பட்டது. தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் தலைவராகி உள்ளார். அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

தேனி நகராட்சி
தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. பிப்ரவரி 9 ல் நடந்த தேர்தலில் திமுக 19, அதிமுக 7, காங்கிரஸ், அமமுக தலா 2, பாஜக ஒரு வார்டுகளில் வென்றன. 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இதனால் திமுக தனிபெரும்பான்மையுடன் இந்த நகராட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரசுக்கு ஒதுக்கீடு
ஆனால் எதிர்பாராதவிதமாக தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. 22வது வார்டில் வெற்றி பெற்ற சற்குணம் என்பவர் நகராட்சி தலைவராக வேட்புமனு செய்ய இருந்தார். இது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 19 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், 2 கவுன்சிலர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சி தலைவர் பதவியை விட்டு கொடுக்க அவர்கள் விரும்பவில்லை.

திமுக வெற்றி
இதனால் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் சற்குணத்திடம் திமுக தரப்பு பேசியது. அவர் உடன்படவில்லை. நகராட்சி தலைவர் பதவியை பிடிப்பதில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான மனுத்தாக்கல் நடந்தது. திமுக சார்பில் 10வது வார்டில் வெற்றி பெற்ற ரேணுப்பிரியா மனுத்தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளரான சற்குணம் வேட்புமனுவும் செய்யவில்லை. இதனால் திமுகவின் ரேணுப்பிரியா நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

சாலையில் தர்ணா
இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நகராட்சி அலுவலகத்தின் முன்புள்ள பெரியகுளம் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். கூட்டணி தர்மம் மீறப்பட்டதாக திமுகவின் கட்சி மேலிடத்திடம் புகார் செய்யப்பட்டது. இதனால் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் இன்று களேபரமாக இருந்தது.

யார் இந்த ரேணுப்பிரியா
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேணுப்பிரியாவின் கணவர் பெயர் பாலமுருகன். திமுகவின் தேனி நகர பொறுப்பாளராக உள்ள இவர் நகராட்சி 20வது வார்டு கவுன்சிலராகவும் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக முயற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால் நகராட்சி தலைவர் பதவி பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவியை நகராட்சி தலைவராக்க முடிவு செய்தார். இதனால் ரேணுப்பிரியா தான் வசித்து வந்த வடப்புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்து நகராட்சி தேர்தலில் 10வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நகராட்சி தலைவராகவும் மாறியுள்ளார்.

முதல்முறையாக திமுக
இந்த நகராட்சியில் 1996ல் சுயேச்சை, 2001ல் அதிமுக, 2006ல் காங்கிரஸ், 2011ல் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்தனர். இதில் 2006ல் தலைவராக இருந்த காங்கிரஸ் முனியாண்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். இதையடுத்து பொறுப்பு தலைவராக அப்போதைய திமுக நகராட்சி துணை தலைவர் இலகேஸ்வரன் 8 மாதம் செயல்பட்டார். அதன்பின் இந்நாள் வரை தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக சார்பில் நிரந்தர தலைவர் இருந்தது இல்லை. இந்நிலையில் தான் வரலாறு மாறி திமுகவில் நகராட்சி தலைவர் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications