ஒரே மர்மமா இருக்குதே.. மீண்டும் சர்ச்சையில் தேனி.. திபுதிபுவென வந்து இறங்கிய விவிபேட் இயந்திரங்கள்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து, தேனிக்கு, விவிபேட் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு, 15 தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலிருந்து, 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற ஆளுங்கட்சியினர் முயற்சி செய்வதாக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவை, தேனியில் இருப்பு வைப்பதற்காக கொண்டு வரப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

திடீர் முடிவு
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இன்று காலை விவிபேட் இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்கள் தேனியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், லட்சுமிபுரத்திலுள்ள தமிழ்நாடு மாநில மைய சேமிப்பு கிடங்கிலிருந்து விவிபேட் இயந்திரங்களும், கன்ட்ரோல் யூனிட்கள் தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, நேற்றே அனைத்துக் கட்சியினருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துவிட்டார்.

சீல் வைப்பு
இதையடுத்துதான், இன்று காலை 6 மணியளவில் சுற்றுலா வேனில் தேனி தாலுகா அலுவலகத்திற்கு விவிபேட் இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வாகனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன்பிறகு, காலை 9 மணியளவில், அனைத்து கட்சியினர் முன்னிலையில், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி உள்ளிட்டோர் தலைமையில் வேனிலிருந்த 30 விவிபேட் இயந்திரங்கள் மற்றும் 20 கன்ட்ரோல் யூனிட்கள் தாலுகா அலுவலக குடோனில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் விவிபேட் வைக்கப்பட்ட அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேனியில் மட்டும் மர்மம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியவர். மேலும், வாரணாசி வரை சென்று மோடியின் வேட்புமனு தாக்கலின்போது தனது தந்தை பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பங்கேற்றவர். இந்த நிலையில், அடுத்தடுத்து, தமிழகத்தில் வேறு எங்குமே இடம் இல்லாத வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட்கள் தேனி நோக்கி அணி வகுக்கின்றன.

முறைகேடு குற்றச்சாட்டு
இதனால்தான், எதிர்க்கட்சிகள் கடும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அமமுகவின் தங்கத்தமிழ்ச் செல்வன் ஏற்கனவே அளித்த பேட்டியின்போது, ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்க முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டு சர்ச்சைகளால் அது மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்க தகவலாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications