தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் வீட்டின் பூட்டை உடைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. பின்னணி என்ன?
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக ஏகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தது.. இதையடுத்து சொந்த ஊரான திருவள்ளூரில் அவருடைய வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அதேபோல் தேனிபொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் பூட்டை உடைத்து சோதனை நடந்தது.
அரசு ஊழியர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புபோலீசார் விசாரணையை தொடங்குவார்கள். முதலில் நேரடியாக விசாரணக்கு பதில், புகாரின் உண்மை தன்மையை பரிசோதிப்பார்கள். போதிய முகாந்திரம் இருக்கிறதா அல்லது பழிவாங்கும் நோக்கில் கொடுக்கப்பட்ட புகாரா என்பதை விசாரிப்பார்கள்..

அரசு ஊழியர் மீது புகார்
போதிய முகாந்திரம் இருக்கிறது என்பதும், அவர் அதிகப்படியான சொத்து சேர்த்திருப்பது உண்மை என்பதும் தெரியவந்தால், அதனை உறுதி செய்வதற்கும், போதிய ஆதாரங்களை திரட்டுவதற்கும், அரசு ஊழியரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவார்கள். அந்த சோதனையில் லஞ்சத்தில் சொத்து சேர்த்தது உறுதியானால் கைது செய்வார்கள். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள். அதன்பின்னர் அந்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெறும்.
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர்
இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக உள்ள ஏகராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏகராஜ் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணியாற்றுகிறார். அவர், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சி அலுவலர் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்களை சிலர் அனுப்பியுள்ளார்கள். அதன் பேரில் திருவள்ளூரில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.
தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ்
அதுபோல், பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சி அலுவலர் குடியிருப்பில் ஏகராஜ் வசிக்கும் வீட்டுக்கு சோதனை நடத்த நேற்று காலை 8 மணியளவில் தேனி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது வீடு பூட்டி இருந்தது. ஆணையர் ஏகராஜ் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். சாவியை அவர் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications