அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நெல்லையில் பரபர போஸ்டர்
நெல்லை: ஓ பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம் இனிமேலும் தொடர்ந்தால் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் நெல்லையில் தலைமைக்கு எதிராக அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்ட வால் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக இந்த அளவிற்கு தோற்பதற்கு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும் , டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், சென்னை மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியமான காரணமாகும்.
வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவினர் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.
கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் ஓரளவிற்கு அதிமுக வெற்றி பெற்றது. தென்மாவட்டங்களில் தோற்றுப் போனதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தோற்றுப் போனதற்கு இட ஒதுக்கீடு முக்கியமான காரணம் என்று அவர்களுக்கு விமர்சனங்கள் உள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் அன்மையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவே காரணம் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் நிச்சயமாக தென்மாவட்டங்களில் அதிமுக இந்த அளவிற்கு தோல்வியை தழுவி இருக்காது என்று அவர் கூறியதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளியானது..

இருவரும் சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் தேர்வின் போது ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு ஓபிஎஸ் இபிஎஸ் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை.. சசிகலா ஆடியோ ரிலீஸ் ஆன பிறகே இருவரும் சந்தித்து பேசினர்.

தேர்தல் தோல்வி
இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களில் அதிமுக கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப் போனோம்.

எச்சரிக்கை
இனிமேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் திருநெல்வேலி மாவட்டம் என்று வால் போஸ்டரில் போடப்பட்டிருந்தது. ஒரு பக்கம் சசிகலா ஆடியோ ரிலீஸ், மறுபக்கம் ஓபிஎஸ் ஆதவாளர்கள் போஸ்டர் என இரு பக்கமும் எடப்பாடி பழனிசாமி சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications