‘நண்பருக்கு’ நன்மை செய்யும் பிரதமர்! எல்லாமே அதானிக்கு? பெரிய ஆபத்தில் தான் முடியும்! சீறிய சீமான்.!
நெல்லை : மின்சாரத்துறை உட்பட அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"இலங்கையில் மோசமான பொருளாதர கொள்கையால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ அரிசி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிலைமை நமக்கு வருவதற்கு முன்னே எச்சரித்து கொள்ள வேண்டும் அதுதான் உணர்த்துகிறது.

நாம் தமிழர் சீமான்
மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால் மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்? மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.

மத்திய அரசு
விவசாயிகள், மீனவர்கள், நீட் மாணவர்கள் மாணவிகள் செத்தார்கள் அதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்ததா? வீட்டில் தேசிய கொடி ஏற்றுவதற்கு வீடு வேண்டும் நீங்கள் தான் சொன்னீர்கள் 75வது சுதந்திர தினம் கொண்டாடும் போது எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று நீங்கதான் சொன்னீங்க தற்போது அனைவருக்கும் வீடு இருக்கா?

தனியாருக்கு லாபம்
மத்திய அரசு ஏன் அழுத்தம் கெடுக்கிறது? ஏனென்றால் தயாரிப்பது அவரது நண்பர் அதானி தயாரிக்கிறார். அவருக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக மக்களை வதைக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி கூட அரசிடம் இல்லை.

பேராபத்தை நோக்கிய பயணம்
எல்லாம் தனியர் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம். அது மோசமான பொருளாதார கொள்கை. இது போன்ற மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் தான் அண்டை நாடான இலங்கை இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது. அது நமக்கும் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்" என கடுமையாக விமர்சித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications