எடப்பாடியார் தாய் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய ராதாபுரம் தொகுதி கிராம மக்கள்
நெல்லை: ராதாபுரம் தொகுதி மீனவ கிராமத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தாயார் மறைவுக்கு பொதுமக்கள் மவுன அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராதாபுரம் தொகுதி பெரியதாழை ஜார்ஜியா மிக்கேல் நகர் ஒரு மீனவ கிராமம். தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய இந்தப் பகுதி நெல்லை மாவட்டத்தின், குட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட, எல்லை கிராமம் ஆகும்.

இந்த கிராமத்தில் 500 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோப்புவிளை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
தற்போது தமிழக அரசு நகரும் நியாய விலை கடை திட்டத்தை அறிவித்துள்ளதை தொடர்ந்து ஜியார்ஜியா மிக்கேல் நகர் பகுதிக்கு நகரும் நியாயவிலை கடை மூலமாக இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா ஜியார்ஜியா மிக்கேல் நகரில் நடைபெற்றது. இவ் விழாவில் இந்த மீனவ கிராமத்தில் வசிக்கும் அனைத்து பொது மக்களும் கலந்துகொண்டனர். ரேஷன் பொருட்களை வழங்கலை துவங்கி வைக்க இக்கிராமத்திற்கு வருகை தந்த ராதாபுரம் சட்டசபை உறுப்பினர் இன்பதுரை விழாவின் துவக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அங்கு வந்திருந்த ஒட்டுமொத்த மீனவ கிராம மக்களும் முதல்வரின் தாயாருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரேஷன் பொருட்களை கிராம மக்களுக்கு வழங்கிவிட்டு இன்பதுரை எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா, மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் உவரி ரமேஷ், அதிமுக நிர்வாகிகள் குளோரி, அல்போன்ஸ், செல்வன், துரைசாமி சுரேஷ், முருகபூபதி உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு












Click it and Unblock the Notifications