தென்காசியில் மனைவி,2 ஆண் குழந்தைகளுடன் சென்ற காவலர்.. யாருக்குமே நடக்கக்கூடாத சம்பவம்
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தென்காசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி, மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் சென்றபோது யாருமே எதிர்பார்க்காத சம்பம் நடந்துள்ளது. அவரது குடும்பத்தற்கே ஒரு கார் எமனாக மாறி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவருடைய மகன் கண்ணனுக்கு 35 வயது ஆகிறது. இவர் தென்காசி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி செல்வராணி, இலஞ்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ராம் கிரிஷ் (5), ராம் கிரிடிக் (6 மாதம்) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.

காவலர் கண்ணன் தனது மனைவி செல்வராணி மற்றும் குழந்தைகளுடன் தென்காசி அருகே இலஞ்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று மாலையில் காவலர் கண்ணன் மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கடையநல்லூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவில் அங்கிருந்து இலஞ்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் வாகனம் வந்து கொண்டிருந்தது.. தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை ராம் கிரிஷ், காவலர் கண்ணன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த செல்வராணி, குழந்தை ராம் கிரிடிக் ஆகியோரை தென்காசி தனியார் மருத்துவனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து இடைகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி காவலர் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications