அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கொடுங்க.. கலெக்டருக்கு திருவள்ளூர் சுந்தரவேலு கடிதம்!
திருவள்ளூர்: தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் அளிக்காத அதிகாரியை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திருத்தணி தாலுகா, பெரியகளக்காட்டூரைச் சேர்ந்த சுந்தரவேலு, என்பவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கூறியுள்ளதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டம்
2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 22ம் தேதி பதிவு தபாலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி பெரிய களக்காட்டூர், வங்கித் தலைவர், வங்கி செயலாளர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தங்கள் புகார் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ், மே மாதம் 5ம் தேதி தங்களுக்கு மேல்முறையீட்டு மனுக்கள் தவறாமல் செய்து வருகிறேன்.

செருப்பால் அடிக்க அனுமதி
தபால் மூலம் எனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு நகை கடன் எத்தனை பேர் பெற்றார்கள் என்ற விபரம் கூட அலுவலகத்தில் இல்லை என்று சொன்னீர்கள். எனவே நான் தங்களைக் கேட்டுக் கொள்வது சம்பந்தப்பட்ட அதிகாரி யார் என்று அறிந்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனையாக, மனுதாரர்கள் செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சித் தலைவருக்கு சுந்தரவேல் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பிரமுகர்
இந்த கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ மற்றும் வழக்கறிஞரான அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் பாபு முருகவேல். தன்னுடைய பணியை முறையாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க ஒருவர் அனுமதி கேட்டுள்ளார் அதற்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் கருத்து
இதுதொடர்பாக மனுதாரர் சுந்தரவேலை, "ஒன்இந்தியா தமிழ்" சார்பில், தொடர்பு கொள்ள முயன்றோம். தொலைபேசி அழைப்பு மணி ஒலித்த போதிலும் எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை என்பதால் மேற்கொண்டு அவரிடம் கருத்து கேட்க முடியவில்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications