அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கொடுங்க.. கலெக்டருக்கு திருவள்ளூர் சுந்தரவேலு கடிதம்!
திருவள்ளூர்: தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் அளிக்காத அதிகாரியை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக திருத்தணி தாலுகா, பெரியகளக்காட்டூரைச் சேர்ந்த சுந்தரவேலு, என்பவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கூறியுள்ளதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டம்
2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 22ம் தேதி பதிவு தபாலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி பெரிய களக்காட்டூர், வங்கித் தலைவர், வங்கி செயலாளர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தங்கள் புகார் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ், மே மாதம் 5ம் தேதி தங்களுக்கு மேல்முறையீட்டு மனுக்கள் தவறாமல் செய்து வருகிறேன்.

செருப்பால் அடிக்க அனுமதி
தபால் மூலம் எனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு நகை கடன் எத்தனை பேர் பெற்றார்கள் என்ற விபரம் கூட அலுவலகத்தில் இல்லை என்று சொன்னீர்கள். எனவே நான் தங்களைக் கேட்டுக் கொள்வது சம்பந்தப்பட்ட அதிகாரி யார் என்று அறிந்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனையாக, மனுதாரர்கள் செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்ய தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சித் தலைவருக்கு சுந்தரவேல் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பிரமுகர்
இந்த கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ மற்றும் வழக்கறிஞரான அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் பாபு முருகவேல். தன்னுடைய பணியை முறையாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க ஒருவர் அனுமதி கேட்டுள்ளார் அதற்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் கருத்து
இதுதொடர்பாக மனுதாரர் சுந்தரவேலை, "ஒன்இந்தியா தமிழ்" சார்பில், தொடர்பு கொள்ள முயன்றோம். தொலைபேசி அழைப்பு மணி ஒலித்த போதிலும் எதிர்முனையில் யாரும் எடுக்கவில்லை என்பதால் மேற்கொண்டு அவரிடம் கருத்து கேட்க முடியவில்லை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications