திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‘அண்ணலுக்கு’ மரியாதை! எங்கோ கேட்ட குரல்! சட்டென திரும்பிப் பார்த்த அன்புமணி! கொண்டாடும் பாட்டாளிகள்!

Google Oneindia Tamil News

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் முருகம்பட்டு கிராமத்தில் கொடியேற்ற பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த தொண்டரின் கோரிக்கையை ஏற்று அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்கள் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட 60 இடங்களில் பாமகவின் கொடியை ஏற்றி வைக்கும் வகையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

 1988-க்குப் பின்னர் 2-வது முறையாக சீல் வைக்கப்படும் சென்னை அதிமுக தலைமை அலுவலகம்! 1988-க்குப் பின்னர் 2-வது முறையாக சீல் வைக்கப்படும் சென்னை அதிமுக தலைமை அலுவலகம்!

அதன்படி திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கரிம்பேடு கிராமத்தில் உள்ள லிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியிலும் அன்புமணி கட்சி தொண்டர்களுடன் கலந்து கொண்டார்.

அன்புமணி இராமதாஸ் சுற்றுப்பயணம்

அன்புமணி இராமதாஸ் சுற்றுப்பயணம்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம், முருகம்பட்டு கிராமத்தில் கொடியேற்ற பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் மதியம் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அன்புமணியை அப்பகுதியில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்க அழைத்தார்.

அம்பேத்கருக்கு மரியாதை

அம்பேத்கருக்கு மரியாதை

இதனையடுத்து கோரிக்கையை ஏற்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அண்ணலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அச்சிலையை முருகம்பட்டு கிராமத்தில் தலீத் மக்கள் முன்னணியின் நிறுவனத் தலைவரான மறைந்த தங்கவயல் வாணிதாசன் அவர்கள் முன்னிலையில் திறந்துவைத்தது பாமகவின் முதல் பொதுச்செயலாளரும், முதல் மத்திய அமைச்சருமான எழில்மலை என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞரின் கோரிக்கை

இளைஞரின் கோரிக்கை


தொடர்ந்து பாமக செய்த சாதனைகளையும் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் அப்பகுதி மக்களிடையே விரிவாக பேசினர். இந்நிலையில் இளைஞரின் கோரிக்கையை ஏற்று அன்புமணி ராமதாஸ் அண்ணல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியதை பாமகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தீவிர திட்டம்

தீவிர திட்டம்

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் இந்த சுற்றுப்பயணம் அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளையும் கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள இளைஞர்களையும் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்கின்றனர் பாமகவினர்.

English summary
When pmk leader Anbumani Ramadoss went to Murukambatu village of RK Pettai Union of Tiruvallur district to hoist the flag, he honored the statue of Annal Ambedkar by accepting the request of a volunteer from the area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X