நம்ம திருவண்ணாமலைய கையில பிடிக்க முடியாது! மாஸா வருது மினி டைடல் பார்க்! இனி சென்னைக்கு போக வேண்டாம்
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, ஒசூர் உள்ளிட்டவை மட்டுமே தகவல் தொழில்நுட்ப நகரங்களாக தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், திருவண்ணாமலை மினி டைடல் பார்க்கின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சென்னை சிறப்பான இடத்தை பெற்று இருக்கிறது. பெங்களூருக்கு அடுத்ததாக சென்னை தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள் சென்னை நோக்கியே செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டைடல் பார்க், மினி டைடல் பார்க், டைடல் பார்க் நியோ ஆகியவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, ஓசூர் ஆகியவை தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றத்தில் உள்ளன.

ஏற்கனவே தஞ்சை உள்ளிட்ட சில பகுதிகளில் டைடல் செயல்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர், மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த பாய்ச்சலாக ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
சுமார் 63,200 சதுர அடி பரப்பளவில் 37 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மினி டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது மட்டுமல்லாது மறைமுகமாகவும் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர். பார்க்கிங்காக தரைக்கு கீழே கட்டிடம், தரை தளம், 6 மாடிகள் இந்த கட்டிடத்தில் இருக்கும். 2026க்குள் கட்டுமானம் முடிக்கப்பட இருக்கிறது.
வேலூர் உள்ளளிட பகுதிகளில் இருக்கும் மினி டைடல் பார்க் போலவே திருவண்ணாமலையில் இந்த டைடல் பார்க் சிறப்பான வசதிகளுடன் அமைய இருக்கிறது. வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐடி துறையில் திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் இருக்கும் நிலையில் இனி அவர்கள் ஐடி வேலையை தேடி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வது குறையும். மேலும் ஏற்கனவே வேலூர் பகுதியில் டைடல் பார்க் அமைய இருக்கும் நிலையில், திருவண்ணாமலையிலும் டைடல் பார்க் அமையவிருப்பதால், கூடுதலாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications