இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிப்படுகொலை.. நீடாமங்கலத்தில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் நடேச தமிழார்வன் (48). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கட்சி பணி மட்டுமின்றி, பொதுமக்களின் பல்வேறு பொது பிரச்சனைகளுக்காக போராட்ட களத்தில் குரல் கொடுத்து கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரிடம் நன்மதிப்பை பெற்றவர்.

ரவுடி மீது புகார்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைவீதியில் பூவனூர் கிராமத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவர் இளைஞர் இருவரை கடுமையாக தாக்கி நிர்வாணப்படுத்தி ரவுடித்தனம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அவ்வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த நடேச தமிழார்வன் தட்டி கேட்டதோடு ரவுடி ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

நடேச தமிழார்வன்
ஆனால் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நீடாமங்கலம் காவல்துறையினர் கஞ்சா வியாபாரி ரவுடி ராஜ்குமாரிடம் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இன்று மாலை நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடேச தமிழார்வன் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது பைக்கை இடைமறித்து நடேச தமிழார்வனை கீழே தள்ளினார்கள்.

வெட்டி படுகொலை
பின்னர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் நடேச தமிழார்வன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நீடாமங்கலம் காவல்துறையினர் நடேச தமிழார்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பதற்றமான சூழ்நிலை
இப்படுகொலை சம்பவத்தை அடுத்து நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றமான சூழ்நிலையினை அடுத்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications