நெல் வீணாகவில்லை.. சிதறிக் கிடந்ததை எடுத்து காட்டியுள்ளார் உதயகுமார்.. அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
திருவாரூர் : கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகவில்லை என்றும், நெல் மூட்டைகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒன்று, இரண்டு சிதறிய முளைத்த நெல்லை எடுத்து ஆர்.பி.உதயகுமார் காண்பித்துள்ளார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மூடைகளில் இருக்கும் நெல்மணிகள் முளைத்து உள்ளது என்று எடுத்துக் காட்டினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. தமிழக அரசின் மெத்தன நடவடிக்கை காரணமாக 5 ஆயிரம் நெல் மூடைகளுக்கு மேல் மழையில் நனைந்து முளைத்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டு குறித்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி. அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதாலும் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் என்னை இன்னும் இரண்டு நாட்கள் திருவாரூர் மாவட்டத்தில் தங்கி இருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

முதல்வர் ஒப்புதல்
மேலும் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் 103 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனடியாக தனியார் மற்றும் அரசு அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு தரமான அரிசி மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட உள்ளது. அதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள்
ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் மூலம் கொண்டுவரப்படும் நெல் பாதுகாக்கப்படும் வகையில் மேலும் 3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு செய்யக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் சேமிப்பு கிடங்குகள் உருவாக்க முதல்வர் அனுமதி தெரிவித்திருக்கிறார்" எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மோசம்
மேலும் கடந்த அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டது. அப்போது ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்உருவாக்கி இருந்தால் மழை காரணமாக நெல் மூட்டைகள் நனையும் அவலம் ஏற்பட்டு இருக்காது. ஒன்று இரண்டு சேமிப்பு கிடங்குகளை கூட உருவாக்க கடந்த அதிமுக அரசு தவறிவிட்டது.

திமுக ஆட்சியில்
தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகள் வியர்வை சிந்தி கொண்டு வந்த நெல்லை மழையில் நனையவிடாமல் பாதுகாக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தேவையான தார்பாய்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பகல் நேரங்களில் திறந்து விடப்படும் இரவு நேரங்களில் மூடப்படும் என்றும் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் உடைப்பு ஏற்படாதவாறு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் மேலும் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வரக்கூடிய மழை காலங்களில் பயன்படுத்துவதற்கும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உதயகுமார் பொய் குற்றச்சாட்டு
அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கப்பலூர் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்குச் சென்று அங்கு நெல் மூட்டைகள் மனையில் நனைந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது நெல் மூட்டைகள் எதுவும் நனையவில்லை என்றும் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் இருந்த ஒன்று, இரண்டு சிதறிய முளைத்த நெல்லை எடுத்து காண்பித்துள்ளார் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

சேமிப்பு கிடங்கை உருவாக்கவில்லை
உதயகுமார் அமைச்சராக இருந்தபோது 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சி செய்தபோது ஒரு நெல் சேமிப்பு கிடங்கையும் உருவாக்கவில்லை என்றும் ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கப்பலூர் பகுதியில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு உருவாக்கவும் திருமங்கலம் பகுதியில் 3,500 மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு உருவாக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications