மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் காது கொடுத்து கேளுங்கள்...சொல்வது அன்பில் மகேஷ்
குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் வாயை அடைக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
திருவாரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவாரூர் மைய நூலகத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக பிரதமர் மற்றும் ஆளுநரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு சட்டரீதியான போராட்டத்தில் முதல்வர் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறினார்.
மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் வாயை அடைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்குப்பின் மாணவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது என்றும் தெரிவித்தார்.

தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புகார் எண்
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி புகார் தெரிவிக்கக்கூடிய எண்ணை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பள்ளி வளாகத்திற்குள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மன ரீதியான பிரச்சனை
தமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு 2 மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சனைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரவணைத்து செல்லும் முதல்வர்
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன. அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார். துறை ரீதியாக எடுக்கப்படுவதற்கும் முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டசபையில் முதல்வர் பேசும்போது இது எனது ஆட்சி அல்ல நமது ஆட்சி என்றார். அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வர் தான் நம் முதல்வர் என்றும் அன்பில் மகேஷ் கூறினார்.
Recommended Video

மேயர் பதவி
உதயநிதி ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏவாக உதயநிதி, மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் அடுத்த பெரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்ற மக்களின் ஆசையை தான் கூறியிருக்கிறேன். அவர் அமைச்சராக வந்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications