அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அவ்வளவுதான்.. ”நாவடக்கத்துடன் பேச வேண்டும்” அட்வைஸ் செய்த பாலகிருஷ்ணன்!
திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனை கடந்து 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். ஆனால் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமாக கொண்டிருக்கும் நாடு, உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என கதைவிடுவது மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்தார்.

இலவச விவாதம்
தொடர்ந்து இலவசங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தும் மத்திய அரசை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி கேட்கிறார். இலவசங்களை குறைத்து கார்ப்பரேட்களை வளர்ச்சியடைய வைக்கும் மத்திய அரசு, சாதாரண மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என கூறுவது குறித்து கேள்வி எழுப்பினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது.

அண்ணாமலை மீது விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. அண்ணாமலை திமுக நிதியமைச்சரை விமர்சிப்பது அநாகரிகமாக உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் பறிபோனால் பட்டினிசாவு நிலை ஏற்படும். பட்டினி சாவுகளை தடுக்கும் நோக்கில் இலவசங்கள் தேவை என வலியுறுத்தும் தமிழக நிதியமைச்சருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடியின் சாதனை
அதேபோல் பத்தே முக்கால் லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் எதற்கு என்று கேள்வி கேட்கிறார். அதனால் தான் உலகிலயே 3வது பணக்காரராக இந்தியர் ஒருவர் இருக்கிறார். அதானி உலக பணக்காரராக வந்திருப்பது என்பது தான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனை என்று தெரிவித்தார்.

ரேஷன் கடை
அதேபோல் தெலங்கானா ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விவகாரம் குறித்து கருத்து கூறுகையில், ரேஷன் கடையில் பிரதமர் படத்தை வைப்பது அவசியமற்றது. மோடி என்பது ஒரு வழி பாதை. அவர் பேசுவது மட்டுமே உலகம் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார். மோடி பேசிக்கொண்டே இருப்பார். நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆவேசமாக விமர்சித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications