அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அவ்வளவுதான்.. ”நாவடக்கத்துடன் பேச வேண்டும்” அட்வைஸ் செய்த பாலகிருஷ்ணன்!
திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனை கடந்து 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். ஆனால் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமாக கொண்டிருக்கும் நாடு, உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என கதைவிடுவது மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்தார்.

இலவச விவாதம்
தொடர்ந்து இலவசங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தும் மத்திய அரசை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி கேட்கிறார். இலவசங்களை குறைத்து கார்ப்பரேட்களை வளர்ச்சியடைய வைக்கும் மத்திய அரசு, சாதாரண மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என கூறுவது குறித்து கேள்வி எழுப்பினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது.

அண்ணாமலை மீது விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. அண்ணாமலை திமுக நிதியமைச்சரை விமர்சிப்பது அநாகரிகமாக உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் பறிபோனால் பட்டினிசாவு நிலை ஏற்படும். பட்டினி சாவுகளை தடுக்கும் நோக்கில் இலவசங்கள் தேவை என வலியுறுத்தும் தமிழக நிதியமைச்சருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடியின் சாதனை
அதேபோல் பத்தே முக்கால் லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் எதற்கு என்று கேள்வி கேட்கிறார். அதனால் தான் உலகிலயே 3வது பணக்காரராக இந்தியர் ஒருவர் இருக்கிறார். அதானி உலக பணக்காரராக வந்திருப்பது என்பது தான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனை என்று தெரிவித்தார்.

ரேஷன் கடை
அதேபோல் தெலங்கானா ரேஷன் கடையில் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விவகாரம் குறித்து கருத்து கூறுகையில், ரேஷன் கடையில் பிரதமர் படத்தை வைப்பது அவசியமற்றது. மோடி என்பது ஒரு வழி பாதை. அவர் பேசுவது மட்டுமே உலகம் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார். மோடி பேசிக்கொண்டே இருப்பார். நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆவேசமாக விமர்சித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications