Chandra Grahan: திருமலை ஏழுமலையான் கோயில் மார்ச் 3 ஆம் தேதி மூடல்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால், ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம். மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. திருப்பதிக்கு நினைத்த போதெல்லாம் பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

குவியும் பக்தர்கள்
அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுது பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக தங்கம், வெள்ளி, பணம், வெளிநாட்டு கரன்ஸிகள் என ஏராளமான மதிப்புக்க மிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
சந்திர கிரகணம்
மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணமானது பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு நிறைவடைகிறது.
எப்போது கோயில் திறக்கப்படும்
பொதுவாக வைகானச ஆகம விதிப்படி சந்திர கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பே கோயிலின் கதவுகள் மூடப்படும் என்பதால் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்பட்ட பின்னர் பக்தா்கள் இரவு 8.30 மணி முதல் மீண்டும் சுவாமி தரிசனத்தை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சேவைகள் ரத்து
சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் பல்வேறு சேவைகள், பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஷ்டதள பாத பத்மராதன சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இதற்கேற்ப தங்களுடைய பணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications