நள்ளிரவில் அலறிய பயணிகள்! சிக்னலுக்கு நின்ற திருப்பதி ரயிலில் திகுதிகுவென புகுந்த கொள்ளையர்கள்! ஷாக்
திருப்பதி: திருப்பதி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் சிக்னலுக்காக நடுவழியில் நின்றது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், திடீரென 10க்கும் மேற்பட்ட கொள்ளை கும்பலினர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திகுதிகுவென ரயிலுக்குள் ஏறினர். பின்னர் பயணிகளை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி 10க்கும் மேற்பட்ட பெட்டிகளில் உள்ள பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் என்ற இடத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா என்ற எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்கு இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். நேற்று முன் தினம் இந்த ரயில் வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.

ஆயுதங்களுடன் ரயிலுக்குள் ஏறிய கும்பல்
ரயில் நள்ளிரவில் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள அனந்தபூர் மாவட்டம் குத்தி என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தது. அப்போது ரயிலுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திகுதிகுவென ஏறியது. ரிசர்வேஷன் பெட்டிக்குள் ஏறிய கொள்ளை கும்பல் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது அவர்களை வந்து எழுப்பியது.
இதனால் நள்ளிரவில் திடீரென யாரோ வந்து எழுப்புகிறார்களே என அதிர்ச்சி அடைந்து எழுந்த பயணிகள், எதுவும் விபத்து நடந்துவிட்டதா? என அதிர்ச்சி மீளாமல் இருக்க.. அதற்குள் கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்தனர். ஆயுதங்களை எடுத்த கொள்ளை கும்பல், பயணிகளிடம் நகை, பணத்தை கேட்டு மிரட்டியது. இதனால் பயணிகள் கத்தி கூச்சலிட்டு அலறினர்.
கொலை செய்துவிடுவோம் என மிரட்டல்
சத்தம் எழுப்பினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய கொள்ளையர்கள், மொத்தம் 10 பெட்டிகளில் இருந்த பயணிகளை மிரட்டி நகை, பணம் மற்றும் பொருட்களை பறித்து சென்று இருக்கிறார்கள். அச்சத்தில் உறைந்த பயணிகள், என்ன செய்வது என தெரியாமல் திணறினர். ரயில் திருப்பதி சென்றதும் ரயிலில் நடந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசில் பாதிக்கப்பட்ட பயணிகள் புகாரளித்தனர்.
ரயில் பயணிகள் அச்சம்
சிக்னலுக்காக ரயில் நிறுத்தப்படும் இடத்தை முன்கூட்டியே கண்டறிந்த கும்பல், தங்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த கொள்ளை கும்பலில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.
சமீப காலமாக ரயில்களில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ரயில்களில் போலீசார் உரிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே பயணிகள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications