யாருகிட்ட...திருப்பதியில் சசிகலா புஷ்பாவின் செல்போனை பறித்து ஊழியர்கள் அடாவடி- மன்னிப்பு கேட்டு சரண்
திருப்பதி: பாஜகவில் அண்மையில் இணைந்த சசிகலா புஷ்பாவிடம் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனை மன்னிப்பு கேட்டு திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பாவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா, திடீரென பாஜகவில் ஐக்கியமானார்.

தமிழக பாஜக தலைவராக சசிகலா புஷ்பா நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதிக்கு சசிகலா புஷ்பா சென்றிருந்தார். அப்போது அலிபிரி சோதனைச் சாவடியில் நேற்று மாலை தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவு ஊழியர்கள் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறி நடந்துள்ளனர்.
இதை அவரது செல்போனில், உடன் வந்த பாதுகாவலர் ஒருவர் படம்பிடித்திருக்கிறார். இதில் மேலும் கோபமடைந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், சசிகலா புஷ்பாவின் செல்போனை பறித்துக் கொண்டனர். இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்திடம் சசிகலா புஷ்பா புகார் செய்தார்.
இதன் பின்னர் செல்போனை திரும்ப ஒப்படைத்த தேவஸ்தான ஊழியர்கள் அவரிடம் மன்னிப்பும் கேட்டனர். இன்று திருப்பதியில் வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, சி.ஏ.ஏ.-ன் தேவை குறித்து விவரித்தார். மேலும் சி.ஏ.ஏ.வால் நாட்டின் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விளக்கம் அளித்தார்.
அப்போது தேவஸ்தான ஊழியர்களின் நடவடிக்கைகள் குறித்து சசிகலா புஷ்பாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு பதிலளிக்க மறுத்த சசிகலா புஷ்பா, தாம் திருப்பதியில் வழிபாடு நடத்த வந்ததாக மட்டுமே தெரிவித்துவிட்டு பிரச்சனை குறித்து பதிலளிக்கவில்லை.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications