Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் கோழிக்கறி சாப்பிட புதுமனைவி மறுப்பு.. உடனே ஓடிய புதுமாப்பிள்ளை.. இப்படியுமா நடக்கும்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி என்பரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் பெற்றேரின் எதிர்ப்பை மீறி கடந்த ஒரு மாதம் முன்பு தான் திருமணம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வசித்துள்ளனர்.இந்நிலையில் காதல் மனைவி சுபலட்சுமி கோழிக்கறி சாப்பிட மறுத்ததால் புதுமாப்பிள்ளை எடுத்த முட்டாள்தனமான முடிவு பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது..

இன்றைக்கு திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இதற்கெல்லாமா வரும் என்பது போல் இருக்கிறது. கணவன் மனைவியிடம் கோபித்துக் கொள்வதற்கும், மனைவி கணவனிடம் கோபித்துக் கொள்வதற்கும் காரணங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அந்த அளவிற்கு வாழ்க்கை குறித்து சரியான புரிதல் இன்றி சிலர் இருக்கிறார்கள்.

A wife in Tiruppur refused to eat chicken within a month what decision made by the newlywed

விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை இல்லாதது, வாழ்க்கையில் கணவன் மனைவி பற்றிய சரியான கருத்துக்கள் இல்லாதது, கொஞ்சம் கூட தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாததது, சகிப்பு தன்மை குறைவு, அவமானங்களை எதிர்கொள்ள தெரியாதது, ஏமாற்றங்களை கையாளத்தெரியாதது போன்ற பல்வேறு காரணங்களால் ஒன்று விவகாரத்து கேட்கிறார்கள். மற்றொரு வகை தம்பதிகள், வாழ்க்கையையே முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதாகும் மணிகண்டன் என்பவர் அங்கு பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது தன்னுடன் வேலை செய்து வந்த 25 வயதாகும் சுபலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 பேரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த திருமணத்துக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால், காதல் தம்பதி, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். சுபலட்சுமியின் சகோதரி மேனகாவும், அவருடைய கணவர் இருவரும் ஒரு கோவில் விசேஷத்திற்காக திருச்சி சென்று விட்டனர். வீட்டில் இருந்த மணிகண்டன் கடையில் கோழிக்கறி வாங்கி வந்து தனது மனைவியை சாப்பிட சொல்லி உள்ளார். அவர், தனது சகோதரி கோவிலுக்கு சென்று இருப்பதால் வீட்டில் கோழிக்கறி சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் உயிரை மாய்த்துக் கொண்டார். இதையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+