வாடா மாரியப்பா.. எப்படி இருக்கே?.. பிடிக்க வந்த கும்கியிடம் கொஞ்சிக் குலாவிய சின்னத்தம்பி!!!
திருப்பூரில் தன்னை பிடிக்க வந்த கும்கி யானையான மாரியப்பனிடம் சின்னத்தம்பி யானை மிகவும் சகஜமாக பழகி இருக்கிறது.
திருப்பூர்: திருப்பூரில் தன்னை பிடிக்க வந்த கும்கி யானையான மாரியப்பனிடம் சின்னத்தம்பி யானை மிகவும் சகஜமாக பழகி இருக்கிறது.
திருப்பூரில் சுற்றி திரியும் ஒற்றையானையான சின்னத்தம்பி தற்போது அமராவதி கிராமத்திற்குள் வலம் வந்து கொண்டு இருக்கிறது. சின்னத்தம்பி யானை அமராவதி கிராமத்திற்குள் சென்றுள்ளது.
அமராவதி சர்க்கரை ஆலைக்கு பின் சின்னத்தம்பி சுற்றி வருகிறது. சர்க்கரை ஆலையில் உள்ள கரும்புகளை தின்றுவிட்டு, அதற்கு பின் இருக்கும் குட்டையில் இது ஓய்வு எடுத்து வருகிறது. இதை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

என்ன செய்கிறது
இன்று மதியத்தில் இருந்து அங்கு இருக்கும் குட்டையில்தான் சின்னத்தம்பி தூங்கிக் கொண்டு இருந்தது. சரியாக 5 மணி வாக்கில் சின்னத்தம்பி தூக்கத்தில் இருந்து எழுந்தது. தற்போது மிகவும் மெதுவாக அந்த இடத்தை சின்னதம்பி யானை சுற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இரண்டு கும்கி
இந்த சின்னதம்பியை பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று மாரியப்பன் யானை, இன்னொன்று கலீம் யானை. இந்த இரண்டு யானைகளும்தான் முதலில் சின்னத்தம்பியை டாப்சிலிப் கொண்டு செல்ல உதவியது. தற்போது அதே யானைகளை மீண்டும் சின்னத்தம்பியை பிடிக்க வரவழைத்து இருக்கிறார்கள்.

மிகவும் மூர்க்கம்
இந்த இரண்டு யானைகளும் மிகவும் மூர்க்கமான யானைகள் ஆகும். முக்கியமாக மாரியப்பன் யானை மிகவும் கோவக்கார கும்கி யானை என்று கூறப்படுகிறது. சின்னத்தம்பி ஒற்றை யானை என்பதாலும், தற்போது மிகவும் மோசமான மனநிலையில் இருப்பதாலும், இரண்டு கும்கி யானைகள் மூலம் இதை பிடிக்க முடியுமா, இல்லை சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

பழக்கம்
இந்த நிலையில் தன்னை பிடிக்க வந்த மாரியப்பனிடம் சின்னத்தம்பி மிகவும் சகஜமாக பழகி இருக்கிறது. இன்று மாலைதான் அமராவதி பகுதிக்கு மாரியப்பன் கொண்டு வரப்பட்டது. அப்போது மாறியப்பனிடம் சின்னத்தம்பி சிறிது நேரம் பழகியது. அதன்பின் மீண்டும் குட்டையில் தூங்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது அமராவதி வயல் பகுதியில் சின்னத்தம்பி சுற்றிக்கொண்டு இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications