திருப்பூர் இளைஞர்களுக்கு கலெக்டர் குட்நியூஸ்.. நல்ல வாய்ப்பு.. வெள்ளிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருப்பூரின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று உடனுக்குடன் வேலைக்கான ஆர்டர்களை வழங்க உள்ளன.

பலர் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிறுவனத்தில் என்ன வேலை காலியாக உள்ளது.. எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அதேபோல் என்ன படித்தால் நல்ல வேலை கிடைக்கும். படிப்புடன் என்னென்ன கற்றுக்கொண்டால் வேலை கிடைப்பது எளிதாக இருக்கும். என்ன திறமைகளுக்கு என்ன ஊதியம் நிரந்தரமாக கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டால், வேலை, ஊதியம் மற்றும் மாற்றங்களை உணர முடியும்.

Good news from the Collector to the youth of Tiruppur Don t miss it on Friday

பொதுவாக அரசு வேலைகள் என்பது ஆண்டுக்கு சில ஆயிரம் பேருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால் பல லட்சம் பேர் படிப்பு முடிந்து வெளியேறுகிறார்கள். அவர்கள் தனியார் துறையில் தான் வேலைக்கு செல்கிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் சரியான வேலையை பெற பலரும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்காக அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க போகிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந்தேதி காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலை அளிக்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முகாம் நாளன்று பணிநியமன ஆணை வழங்கப்படும். முகாமில் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்துகொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட உரிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதாவது https://www.tnprivatejops.tn.gov.in என்ற தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+