Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் ரிதன்யாவின் நிலைக்கு மூலக்காரணமான மாமியார் எங்கே.. அரசியல் அழுத்தம்.. கோபத்தில் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அரசி​யல் அழுத்​தங்​களால் திருப்பூர் ரிதன்யா வழக்கை கிடப்​பில் போடு​வதற்​கான முகாந்​திரங்​கள் இருப்பதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உடல்​நிலை​யைக் காரணம்​ காட்டி ரிதன்யாவின் மாமியார் சித்​ரா தே​வியை விடுவித்ததை ஏற்க முடியாது என்றும், அவர் தான் குடும்​பத்​தில் நடந்த விஷ​யங்​கள் அனைத்​துக்​கும் காரண​மாக இருந்தவர்களில் ஒருவர் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்..

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழில் அதிபர் அண்ணாதுரை அந்த பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய மகள் ரிதன்யாவுக்கு 27 வயது ஆகிறது. இவருக்கும், கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பமான ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு பெற்றோர்களின் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

Is Tiruppur Rithanya s mother-in-law Chitradevi responsible for her condition as claimed by family

ரிதன்யாவிக்கு திருமணம்

திருமணத்தின் போது வரதட்சணையாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். . ஆனால் இவ்வளவு செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தும் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை.

பல லட்சம் வருமானம்

ரிதன்யாவிடம் மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகிய இருவரும் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி டார்ச்சர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் மாதம் பல லட்சம் வருமானம் வருகிறது என்பதால், கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளார்கள். அவர்கள் மூன்று பேரும் ரிதன்யாவை மன ரீதியாக டார்ச்சர் செய்தார்களாம். இதனால் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

சித்ரா தேவி கைது இல்லை

மேலும் தனது இந்த நிலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தை அண்ணாதுரைக்கு வாட்​ஸ்​அப்பில் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்​து, ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் மீது பல்வேறு பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​து, கவின்​கு​மார், ஈஸ்​வரமூர்த்​தி​யைக் கைது செய்​தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சித்ரா தேவியை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை

ரிதன்யாவின் குடும்பம் கோபம்

இதனால் ரிதன்யா குடும்​பத்​தினர் கோபம் அடைந்துள்ளனர். தங்கள் மகளின் நிலைக்கு காரணமானவனரை கைது செய்யாதது குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். திரு​மண​மான 20 நாட்​களில் நள்​ளிர​வில் பிரச்​சினை ஏற்​பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்​தார் என்றும், அப்​போதே அவர் நிம்ம​தி​யை தொலைத்​து விட்​டார் என்றும் கூறினார்கள். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்​யும் வரை, போலீ​ஸார் விசாரணை முறை​யாக நடத்திய நிலையில், உடல்​நிலை​யைக் காரணம்​ காட்டி சித்​ரா தே​வியை விடு​வித்​துள்ளார்கள் என்றும் இதனை ஏற்க முடியாது என்றும் ரிதன்யாவின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

ஏனெனில், குடும்​பத்​தில் நடந்த விஷ​யங்​கள் அனைத்​துக்​கும் மூலகாரண​மாக இருந்​தவர்​களுள் ஒரு​வர் மாமி​யார் சித்ராதே​வி தான் என்றும், ரிதன்யாவின் உடலை பெறும்​வரை 3 பேர் கைது என்று சொல்​லிவந்த போலீ​ஸார், சடலத்​தைப் பெற்றதும் 2 பேரை மட்​டும் கைது செய்​து​விட்​டு, சித்​ராதே​வியை விடு​வித்​துள்​ளனர். அவரை​யும் கண்டிப்பாக கைது செய்ய வேண்​டும் என்றும் அண்ணாதுரை தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

அரசியல் அழுத்தம்

அரசி​யல் அழுத்​தங்​களால் இந்த வழக்கை கிடப்​பில் போடு​வதற்​கான முகாந்​திரங்​கள் உள்​ளதாகவும், ரிதன்யா உயி​ரிழப்​பில் உரிய நீதியை பெற்​றுத்தர வேண்​டும் என்றும் போலீ​ஸார் விசாரணை, கோட்​டாட்​சி​யர் விசா​ரணை​யில் நியா​யம் கிடைக்​குமா என்று தங்களுக்கு சந்​தேகம் இருப்​ப​தால், முதல்​வர் ஸ்டா​லின் இதில் தலை​யிட்​டு, உரிய நீதி பெற்​றுத்தர வேண்​டும் அல்​லது சிபிஐ விசா​ரணைக்கு பரிந்​துரைக்க வேண்​டும் என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்ணாதுரை பேட்டி

இதுபற்றி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், வரதட்சணை கொடுமையால் எனது மகள் உயிரை விட்டுள்ளார். போலீசார் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் கட்சியின் பின்புலம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அரசியல் அழுத்தம் காரணமாக மகள் வழக்கை போலீசார் நீர்த்துப்போக செய்து வருகிறார்கள். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Is Tiruppur Rithanya s mother-in-law Chitradevi responsible for her condition as claimed by family

சிபிஐ விசாரணை

ஆனால் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேரை மட்டுமே கைது செய்து உள்ளனர். சித்ராதேவி இன்னும் கைது செய்யப்படவில்லை. போலீசார் உரிய விசாரணை நடத்த மாட்டார்கள். எனவே எனது மகள் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்த வேண்டும் என்று கூறி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்து உள்ளோம்" என்று கூறினார்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+