எம்ஜிஆரை அவமானப்படுத்தும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.. திடீரென அதிமுக டோனில் மாறி.. மோடி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை புகழ்ந்து பேசியது கவனம் பெற்றது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவினர் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

PM Modi praises former Tamil Nadu CM MGR in closing ceremony of En Mann Ek Makkal padayatra in Tiruppur

இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசினார். எம்ஜிஆர் பற்றி பிரதமர் மோடி பேசியதாவது:

நண்பர்களே இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்து பார்க்கிறேன். இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த கண்டிக்கு சென்றேன். அங்குள்ள மக்களிடம் பேசினேன். இன்று அவர் பணியாற்றிய மண்ணுக்கு வந்துள்ளேன். எம்ஜிஆர் தனது ஆட்சியில் தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதி கொடுத்தார். இதனால் பெண்கள், இளைஞர்கள் எம்ஜிஆரை மதித்து வந்தனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

ஏழை மக்கள் அத்தனை பேரும் ஒப்பற்ற தலைவர் என எம்ஜிஆரை புகழ்ந்து வருகின்றனர். எம்ஜிஆர் குடும்ப அரசியல் என்ற அடிப்படையில் சாதிக்கவில்லை. திறமையின் காரணமாக அரசியலில் ஜொலித்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திமுக தமிழகத்தில் எம்ஜிஆரை அவமானப்படுத்தும் வகையில் கேவலமான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+