திருப்பூர், கோவை மாவட்ட இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. கலெக்டர்கள் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அரசால் நடத்தப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான திறமை உள்ளவர்களை அறிய, வேலை தேடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுகின்றன. அந்த முகாமில் பங்கேற்கும் பலருக்கும் வேலை கிடைத்து வருகிறது. இதில் படித்த பட்டதாரிகள், படிக்காதவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற முடியும்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் 4-வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.inஎன்ற தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வேலைதேடுபவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
இதேபோல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு, +2, ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசமாக வழங்கப்படும், பங்கேற்க வயது வரம்பு எதுவும் கிடையாது.
இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களிடம் உள்ள பணிக்காலியிடங்களுக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு - 0422-2642388 என்ற எண்ணில் அறியலாம்.












Click it and Unblock the Notifications