விபூதி இட்டு வந்த மாணவியை திட்டிய ஆசிரியை? மதமாற்ற முயற்சி என பெற்றோர் புகார்.. நடந்தது என்ன
திருப்பூர்: திருப்பூர் அரசுப் பள்ளியில் மதம் மாற்றும் செயல்களில் ஆசிரியை ஈடுபடுவதாக மாணவி ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவியை மதம் மாற்றும் செயல்களில் ஆசிரியை ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அந்த மாணவி பேசும் வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

திருப்பூர்
திருப்பூரில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்த மாணவி தினம்தோறும் பள்ளி செல்லும் போது, நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பள்ளியில் தமிழ் ஆசிரியை திலகவதி மாணவியைப் பார்த்து தினமும் நெற்றியில் பட்டை போட்டு வரத் தெரிகிறது ஒழுங்காகப் படிக்கத் தெரியாதா என்று திட்டியதாகக் கூறப்படுகிறது.

திட்டிய ஆசிரியை
மேலும், வகுப்பு தொடங்கும் முன் இரு கைகளையும் நெஞ்சில் இறுக்கி வைத்துக் குறிப்பிட்ட கடவுளைப் பிரார்த்தனை செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். மேலும், இஷ்ட தெய்வங்களைக் கூறும்படி ஆசிரியை கேட்ட போது, மாணவி சிவன் என்று குறிப்பிட்டதாகவும் அதை அந்த ஆசிரியை விமர்சிக்கும்படி பேசியதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

அச்சம்
இதுமட்டுமின்றி ஆங்கில ஆசிரியையும் தனது மகள் நெற்றியில் விபூதி இட்டுள்ளதைக் குறிப்பிட்டுத் திட்டியதாகவும் கையெழுத்து பயிற்சியில் முருகன், சிவன், விநாயகர், கிருஷ்ணர் என்று இந்து தெய்வங்கள் பெயரை எழுதக்கூடாது என்று கடுமையாக ஒருமையில் பேசியதாகவும் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மேலும், இதனால் தங்கள் மகள் பள்ளி செல்லவே அச்சப்படுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

நடவடிக்கை தேவை
இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் பேஸ்புக் பக்கத்திலும் மாணவி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிலும் மாணவி இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மன உளைச்சலுக்கு ஆளான தனது மகள் பள்ளி செல்ல மறுப்பதோடு அச்சத்தில் உள்ளதாகவும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது மகளுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய ஆதாரங்கள் கிடைத்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications