அதிகாலையில் பரிகார பூஜை.. சக்திவேல் செய்த பயங்கரம்.. மாமியார் வீட்டில் சிக்கினார்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் பரிகார பூஜையின்போது, பெண்ணை நகை பணத்துக்காக கொலை செய்து தப்பிய ஆட்டோ டிரைவரை, தனிப்படை போலீசார் மதுரையில் உள்ள அவரது மாமியார் வீட்டில் கைது செய்தனர்.
மகனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதற்காக பரிகார பூஜை நடத்திய முதியவர்களை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், அகரப்பாளையம் புதுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 60; வெள்ளகோவிலில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி வயது 55.

ஏன் பூஜை
இவர்களது மகனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மகனுக்கு குழந்தை பேறு வேண்டி, ஆட்டோ டிரைவர் சக்திவேல் வயது 35, என்பவர் மூலம், சில நாட்களுக்கு முன், ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதி, பர்னிச்சர் கடையில், அதிகாலையில் பரிகார பூஜை செய்தார்கள்,

தப்பி ஓட்டம்
அப்போது, தம்பதியை சுத்தியால் தாக்கி, 5 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாயுடன் சக்திவேல் தப்பினார். இதில், ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதுரையில் சக்திவேலை கைது செய்தனர்.

ஏமாற்றிய சக்திவேல்
போலீசார் இது குறித்து கூறுகையில், :ஆறுமுகத்தின் கடையில் விற்பனையாகும் பொருட்களை, ஆட்டோவில் சக்திவேல் எடுத்து செல்வது வழக்கம். சக்திவேலுக்கு, 1 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது. பரிகார பூஜை மூலம் பணம் கிடைக்கும் என, ஆறுமுகத்திடம் சொல்லி பூஜை நடத்தியுள்ளார்.

கைது செய்த போலீஸ்
அப்போது பூஜையின் போது திடீரென மனம் மாறி, நகை, பணத்துக்காக ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரியை கத்தியால் தாக்கிவிட்டு பணம் நகையுடன் தப்பியுள்ளார். இதில் ஈஸ்வரி உயிரிழந்தார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரையில் உள்ள மாமியார் வீட்டில், மனைவியுடன் தங்கியிருந்த சக்திவேலை கைது செய்தோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications