மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே.. எப்போதும் இன்ஸ்டா ரீல் தானா? கோபமான கணவன்! சித்ராவுக்கு என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : திருப்பூர் அருகே எப்போதும் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததை கைவிட வேண்டுமென்ற கணவனின் பேச்சை கேட்காத இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நவீன யுகத்தில் செல்போனுக்கு அடிமையாகி கிடக்கும் இளம் பெண்கள் மாணவர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. அற்ப லைக்குகளுக்காகவும் கமெண்டுகளுக்காகவும் வாழ்க்கையை தொலைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் பேர் வழிகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்கள் ஒரு பக்கம், இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி மீள முடியாமல் தவிக்கும் குடும்பப் பெண்கள் ஒரு பக்கம் என சிக்கல் நீடித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதை நிறுத்தாததால் இளம் பெண் தனது கணவனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்த அமிர்தலிங்கமும் அவரது மனைவி சித்ரா அந்தப் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். குடும்ப வறுமை காரணமாக இருவருமே வேலைக்குச் சென்ற நிலையில் அவர்களது இரண்டு மகள்களும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்திருக்கின்றனர்.

மனைவி மாயம்

மனைவி மாயம்

முதலில் குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வந்த சித்ரா அதன் பிறகு செல்போனில் டிக் டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அது தடை செய்யப்பட்ட பிறகு ஷேர் சாட் இன்ஸ்டாகிராம் ரீல் ஆகியவற்றில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலைக்கு கூட செல்லாமல் எப்போதும் வீடியோ போட்டு வந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சில நபர்களுடன் திடீரென மாயமாகி இருக்கிறார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

இது குறித்து விசாரித்த போது சென்னையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக அந்த நபர்களுடன் சென்றது தெரியவந்ததும் இதற்கு அமிர்தலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி சென்னைக்கு சென்று சில மாதங்கள் இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என சித்ரா மீண்டும் திருப்பூர் வந்திருக்கிறார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை செல்வதாக சித்ரா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

கடும் கோபம்

கடும் கோபம்

இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். தொடர்ந்து அவரது உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி நிலையில் சித்ராவை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் சித்ராவின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அருகில் வசிப்போர் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கழுத்தில் காயங்களுடன் சித்ரா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மனைவி கொலை

மனைவி கொலை

இதை அடுத்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக அமிர்தலிங்கத்தை பிடித்து விசாரித்த போது இன்ஸ்டாகிராம் வீடியோ போடுவதை நிறுத்தாததால் மனைவியை கொலை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+