'இவ்வளவு கூட்டம் ஏறினா வண்டி ஓட்ட முடியாது'.அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி இறங்கி சென்ற டிரைவர்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவில் பேருந்து சேவை இல்லை. காலை நேரத்தில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்றபடி அதிக பேருந்து வசதி இல்லை.

Recommended Video

    இவ்வளவு கூட்டம் ஏறினா வண்டி ஓட்ட முடியாது.அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி இறங்கி சென்ற டிரைவர்

    இதனால் அவர்கள் வேறு வழியின்றி பேருந்தில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாத இறுதியில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    உடைந்த படிக்கட்டு

    உடைந்த படிக்கட்டு

    50 பயணிகள் செல்ல வேண்டிய பேருந்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடியுடன் பயணம் செய்தனர். அருகே தரங்கம்பாடி சாலையில் சென்றபோது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது. உடைந்து விழுந்த படிக்கட்டில் சில மாணவர்கள் நின்று பயணம் செய்து கொண்டிருந்தார். நல்லவேளையாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

    கூடுதல் பேருந்துகள் வேண்டும்

    கூடுதல் பேருந்துகள் வேண்டும்

    இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் கூடுதல் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு நோக்கி அரசு பேருந்து(வண்டி எண்: 1டி) சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அதிக அளவு பயணிகள் இருந்தனர்.

    நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு..

    நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு..

    திருமஞ்சன வீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதிகமாக பயணிகளை ஏற்றியதால் டிரைவர் பேருந்தினை இயக்க முடியாமல் தவித்துள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பேருந்து டிரைவர் பேருந்தினை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பேருந்து அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்தது.

    பொதுமக்கள் கோரிக்கை

    பொதுமக்கள் கோரிக்கை

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றும் செல்ல முடியாமல் தவித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து பேருந்தினை இயக்கும்படி டிரைவரிடம் கூறினார்கள். இதனை தொடர்ந்து வெகு நேரம் கழித்து அங்கு வந்த டிரைவர் பேருந்தினை இயக்கிச் சென்றார். மாணவர்கள் நலன் கருதி மயிலாடுறை மாவட்டத்தில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+