மீண்டு(ம்) வரும் ஏர் இந்தியா.. திருச்சி மக்களுக்கு டாட்டா சொன்ன குட்நியூஸ்.. என்ன தெரியுமா?
திருச்சி: 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் பணிபுரியும் டெல்டா மாவட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மஸ்கட், ஓமன், சிங்கப்பூர், துபாய், மலேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து தடைபட்டு இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பரவலின்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறப்பு மீட்பு விமானங்களை திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இயக்கி வந்தது. இதனிடையே கடந்த 27 ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து அனைத்து வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதன் விளைவாக மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 27-ந் தேதி தொடங்கி உள்ளது. புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இரவு 10.10 மணிக்கு இந்த விமானம் இயக்கப்படும்.
அதேபோல் கோலாலம்பூரில் இருந்து திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் விமானம் இயக்கப்பட இருப்பதாகவும், அது இரவு 7.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் திருச்சிக்கு அருகாமையில் உள்ள டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது இவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications