பேய்க்காற்று.. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட இரும்பு தடுப்புகள்.. பேராபத்து தவிர்ப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்தன.
திருச்சி: திருச்சியில் இன்று கோடை மழை கொட்டித்தீர்த்தது. இந்த வேளையில் சூறைக்காற்று பயங்கரமாக வீசியது. இதையடுத்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகள் தூக்கி வீசப்பட்டன. கார்கள் மீது விழுவது போல் சென்ற இரும்பு தடுப்பு வேலிகள் சென்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக பேராபத்து தவிர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆங்காங்கே கோடை மழை கொட்டுவதோடு, காற்றும் வீசுகிறது.
இதனால் கோடை வெயில் ஓரளவு தணிந்துள்ளது. இந்நிலையில் தான் வரும் நாட்களில் மழை ஓரளவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது.

நாளை வரை மழை
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 19) முதல் நாளை (மார்ச் 20) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருச்சியில் பெய்த மழை
இந்நிலையில் இன்று பல இடங்களில் மழை பெய்தது. இதனால் மக்கள் ஓரளவு வெப்பத்தில் இருந்து தப்பித்தனர். இந்நிலையில் தான் திருச்சியில் இன்று கனமழை கொட்டியது. திருச்சி மாநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருச்சி புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சமயபுரத்தில் மழை கொட்டித்தீர்த்தது.

தூக்கி வீசப்பட்ட தடுப்பு வேலிகள்
இந்த வேளையில் சூறைக்காற்றும் வீசியது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரும்பு தடபு்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. அதாவது நெடுஞ்சாலையின் ஒருபகுதியில் இருந்து சென்டர் மீடியனையும் தாண்டி மறுபுறத்துக்கு இரும்பு தடுப்பு வேலிகள் சென்றன.

வாகன ஓட்டிகள் பாதிப்பு
இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் மீது இரும்பு தடுப்பு வேலிகள் விழும் நிலை அங்கே நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரும்பு நெடுஞ்சாலைகளில் தூக்கி வீசப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகளை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக












Click it and Unblock the Notifications