அண்ணாமலை பதவி விலக வேண்டும்.. செருப்பு வீச்சு சம்பவத்தால் கொதித்த காங்கிரஸ் எம்.பி!
திருச்சி : நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் காரின் மீதான பாஜகவினரின் செருப்பு வீச்சு சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பாதயாத்திரை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை அருகிலிருந்து தொடங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபம் வரை பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

திருநாவுக்கரசர் எம்.பி
பாதையாத்திரை தொடங்குவதற்கு முன்னதாக, வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர், இந்த பாதயாத்திரை சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பதவி விலக வேண்டும்
மேலும், மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டித்தனமான செயல். அமைச்சர் என்றில்லை, எந்தவொரு தனி மனிதன் மீதும் இதுபோன்ற தாக்குதலை நடத்தக்கூடாது. கருத்தைக் கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் திருநாவுக்கரசர்.

ஆளுநர் அரசியல்
தொடர்ந்து, தமிழக ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தொடர்பாகப் பேசிய திருநாவுக்கரசர், நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால், ஆளுநருக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது. அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறில்லை. ஆனால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது எனத் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications