பார்க்கத்தான் வெறும் சில்லறை.. அவ்வளவும் மின்னும் தங்கம்.. 2 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்!
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
திருச்சி: பார்க்கத்தான் வெறும் சில்லறை காசுகள்.. அவ்வளவும் தக தகவென மின்னும் தங்க கட்டிகள்.. துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.53.83 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
எவ்வளவுதான் தமிழக ஏர்போர்ட்களில் அதிகாரிகள் படு கண்டிப்பாக இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளும் இவர்களை வளைச்சு வளைச்சு கைது செய்து, ஜெயிலில் அடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதிலும் திருச்சி ஏர்போர்ட்டில் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இன்று காலைகூட துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினர்.
இதில் ஒருவரது செயல் மட்டும் வித்தியாசமாக தெரியவும், அவரை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போதுதான், திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் என்பவர் ரூ.6.98 லட்சம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், கொஞ்ச நேரத்திலேயே இன்னொருவரை மடக்கி பிடித்தனர்.

அதே விமானத்தில் வந்த அந்த நபர் பெயர் பஷீர் அகமது. இவரிடம் எக்கச்சக்கமாக சில்லறை காசுகள் இருந்தன. ஓரளவு சில்லறை இருந்திருந்தாலும் டவுட் வந்திருக்காது.. ஆனால் இவர் அளவுக்கு அதிகமாக சில்லறை கொண்டு வரவும் அவரை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அப்போதுதான் அவை அனைத்துமே தங்க காசுகள் என்பது தெரியவந்தது.
அதாவது, ரூ.46.85 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சில்லறைகளாக மாற்றி கொண்டு வந்துள்ளார் பஷீர் வைத்திருந்தார். இதையடுத்து 22 தங்க காசுகளும், கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் இருந்தும் 1.433 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு மொத்தம் 53.83 லட்சம் என்கிறார்கள். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.











Click it and Unblock the Notifications