சாட்டை துரைமுருகன் எங்கே என்று தெரியவில்லை.. போலீஸ் கமிஷனரிடம் மனைவி மாதரசி பரபரப்பு புகார்
திருச்சி: வதந்தி பரப்பிய புகாரில் சாட்டை துரைமுருகன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சாட்டை துரைமுருகன் மனைவி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சனிக்கிழமை சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

சாட்டை துரைமுருகன் கைது
இது தொடர்பாகச் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்ரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். தனது முதல் ட்வீட்டில், 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அடுத்த ட்வீட்டில், "சீன நிறுவனமான Foxconnல் பணிபுரிந்த பெண்களில் 57 பேருக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி மயக்கம். இதுவரை 9 பெண்கள் இறந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், சாட்டை துரைமுருகனை ஞாயிற்றுக்கிழமை (டிச.10) அவர் திருச்சி மாவட்டம், பிராட்டியூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து திருச்சி தில்லைநகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்யப்பட்டார்.

மனைவி புகார்
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அவரது மனைவி மாதரசி இரவு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உளவுத் துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் மனுவில் தனது கணவர் (சாட்டை துரைமுருகன்) போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரபு பரபரப்பு பேட்டி
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகனின் வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "காவல்துறையினர் தன்னை கைது செய்ய வந்திருப்பதாகச் சாட்டை துரைமுருகன் எனக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்குச் சென்றதாகத் தெரிவித்தனர்.

எந்த தகவலும் இல்லை
இருப்பினும், நாங்கள் சென்று பார்த்த போது அங்கு அவர் அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து அதே போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரை கே.கே நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். அங்குச் சென்று பார்த்தபோதும், அங்கும் அவர் இல்லை. தொடர்ந்து காவல்துறையினர் எங்களை அங்கும் இங்கும் அலைக்கழித்து வருகின்றனர். எதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது கூட எங்களுக்குத் தெரிவிக்காமல் காவல்துறை செயல்படுகிறது.

ஒப்படைக்க வேண்டும்
சாட்டை துரைமுருகன் மீது யார் குறிப்பிட்டு யார் புகார் கொடுத்தார். எங்கே புகார் கொடுத்தார் என்று எந்த தகவலையும் போலீசார் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. காவல்துறையினரும் முறையான தகவல்களை எங்களுக்குத் தெரிவிக்க மறுக்கின்றனர். உடனடியாக காவல்துறை அவரை அவரை கண்டறிந்து குடும்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். சாட்டை துரைமுருகன் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தற்போது தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications