இந்தாங்க உங்க 1000 ரூபாய் காசு.. வாரிக் கொடுத்த எம்எல்ஏவை திணறடித்த மாணவி! என்னதான் பிரச்சினை..!
தூத்துக்குடி : காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமர்தராஜ் உருவப்படத்தை வரைந்து கொடுத்த கல்லூரி மாணவிக்கு அவர் 1000 ரூபாய் கொடுத்த நிலையில், பணத்தை வாங்க மறுத்த மாணவி மேடையிலேயே அழுது புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.கே ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்லூரி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான ஊர்வசி அமிர்தராஜ், உள்ளிட்ட பல கலந்து கொண்டர்.

கல்லூரி நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசுவதற்கு முன்னதாக கல்லூரியில் மாணவி மாரியம்மாள் என்பவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அந்த கல்லூரியின் கல்விக் கழக தலைவர் பெ.மு.சுப்ரமணியம் ஆகியோரின் படத்தை பென்சிலால் வரைந்து பரிசாக வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், மாணவி மாரியம்மாளுக்கு பரிசாக ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.

1000 ரூபாய் பரிசு
இதனைக் கண்ட அவர், "ஐயோ, எனக்கு இந்த பணம் வேண்டவே வேண்டாம்" என்று பிடிவாதமாகக் கூறினார். நான் பாசத்துடன் வரைந்து கொடுத்த இந்த ஓவியத்திற்கு எம்எல்ஏ பணம் கொடுக்கிறாரே என ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். உடனே எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மாணவி அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

மாணவி பிடிவாதம்
ஆனாலும் கல்லூரி மாணவி வேண்டாம் என்று கண்ணீருடன் பிடிவாதமாகக் கூறிவிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜை பொறுத்தவரை யார் உதவி கேட்டாலும் தவறாமல் வாரிக் கொடுப்பார் என்ற பேச்சு உண்டு. இந்த சூழலில் அவர் கொடுத்த அன்பளிப்பை கல்லூரி மாணவி வாங்காமல் தவிர்த்தது பேசுபொருளாக மாறியது.

விழாவில் பரபரப்பு
இதையடுத்து மாணவிக்கு கொடுக்க வந்த பணத்தை, கல்லூரி முதல்வர் சின்னதாயிடம் கொடுத்தார்.பின்னர் மாணவியை சமாதானப்படுத்தும் வகையில் சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். இதையடுத்து அந்த மாணவிக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர் பேராசிரியர்கள். இதன் தொடர்ச்சியாக கல்விக் கழக தலைவர் பெ.மு.சுப்ரமணியத்திற்கு தான் வரைந்த ஓவியத்தை மாணவி பரிசாக கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications