பிரதமர் மோடி சொந்த காசுலயா தர்றாரு? திடீரென ரூட்டை மாற்றிய கார்த்தி சிதம்பரம்! அப்போ அது இல்லையா?
தூத்துக்குடி : தெலுங்கானா மாநிலத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியரை வசைபாடியது வருத்தம் அளிக்கிறது எனவும், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வரும் 7ஆம் தேதி ராகுல் காந்தி நடைபயண பிரச்சாரம் மேற் கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகியுமான கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார்.

கார்த்தி சிதம்பரம்
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி நேரடியாக மக்களை சந்திப்பது நல்ல விஷயம். இது கட்சிக்கு வலு சேர்க்கும். நடைபயணம் செல்லும் வழியெல்லாம் கட்சியினர் ஒன்று திரண்டு வந்தாலே அது பலம். அதே வேளையில் பொதுமக்களை நேரடியாக சந்திப்பதில் கட்சியோட தொண்டருக்கும் தலைமைக்கும் மக்களின் நிலைப்பாட்டை கட்சி புரிந்து கொள்ள முடியும், எங்களுடைய நிலைப்பாட்டினை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்

நடைபயண பிரச்சாரம்
பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது என்பது எடுத்துச் சொல்வதற்கு இது ஒரு வாய்ப்புதான் நடைபயண பிரச்சாரம். காங்கிரஸ் கட்சிக்குள்ளே போட்டி இருந்தாலும் கட்சி ஒற்றுமையாக தான் இருக்கிறது. எந்த வகையிலும் கட்சி பிரிந்து இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரைக்கும் ஒற்றுமையாக தமிழ்நாட்டில் நடைபெறும் நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள்.

நிர்மலா சீதாராமன்
தெலங்கானா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் கடையில் மோடி படம் ஏன் வைக்கவில்லை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கு பேசுவதை இன்று பார்த்து இருக்கிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி சொந்த பணத்தில் ரேஷன் அரிசி கொடுக்கிற மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். நிதி அமைச்சர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை வருத்தமளிக்கிறது என கூறினார். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து வருவது போல் கார்த்தி சிதம்ரம் பேசி வந்த நிலையில், இன்று பாஜகவை நேரடியாக விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications