ஆர்.எம்.ஆர். பாசறை அரசியல் இயக்கமாக மாறும்... அதிரடி கிளப்பும் ராம் மோகன் ராவ்..!
தூத்துக்குடி: ஆர்.எம்.ஆர். பாசறை அரசியல் இயக்கமாக மாறும் எனக் கூறியுள்ளார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ். தனது ஓய்வுக்காலத்தில் சமுதாய ரீதியிலான பணிகளை கவனித்து வருகிறார். ஆர்.எம்.ஆர். பாசறை என்ற அமைப்பில் 10 சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற அந்தணர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தமிழகத்தில் அந்தணர் சமுதாயத்திற்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 30 லட்சம் அந்தணர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு இப்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது பெயரில் நடைபெற்று வரும் ஆர்.எம்.ஆர் பாசறை விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்றும் ஆனால் அது எப்போது என்பதை இப்போது தாம் கூறமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இவர் தலைமைச் செயலாளராக இருந்தபோது இவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை இப்போது உள்ள ஆட்சியாளர்கள் தட்டிக் கேட்கவில்லை என்பது அவரது மன வருத்தத்திற்கு காரணமாகும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரை அடக்கம் செய்யும் வரை அனைத்து விவகாரங்களிலும் ராம் மோகன் ராவின் பங்களிப்பு முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர் அறிந்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் இயக்கம், பாசறை எனக் கூறி திருச்செந்தூரில் அதிரடி கிளப்பியுள்ளார் ராம் மோகன் ராவ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications