மூச்சுவாங்க ஓடி வந்து மனுதாக்கல் செய்த பெண்.. கொந்தளித்த மலைகிராம மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு
கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்ய வந்த பெண்ணால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே, ஊராட்சி தலைவர் தொகுதியை பட்டியலின மக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலைகிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. பட்டியலின பெண் கடைசி நேரத்தில் ஓடிவந்து வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், அது தொடர்பான பிரச்சனைகளும், விவகாரங்களும் வெடித்து கிளம்பி வருகின்றன..
இதையொட்டி அதிமுக - திமுக இடையே மோதல்களும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியதிற்கு உட்பட்ட கொத்தகோட்டை ஊராட்சி, செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்...

மனுதாக்கல்
அதிமுகவை சேர்ந்த இவர் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய 7வது வார்டில் மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் மனுதாக்கல் செய்யவரவில்லை. அவருக்கு பதில் மனுவை முன்மொழியும் நபர், ஜெய்சங்கரின் மனுவை தாக்கல் செய்ய வந்தார்... இதனால், தேர்தல் அதிகாரி மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துதருமாறு சொன்னார்.. உடனே அந்த மனுவை சரிசெய்து நேற்று மாலை 5.05 மணிக்கு தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

திமுக
ஆனால், இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவர் 4.40 மணிக்கே அலுவலக வளாகத்திற்குள் வந்ததாகவும், அதனால் மனுவை வாங்க வேண்டும் என்று அதிகாரியிடம் அதிமுகவினர் வலியுறுத்தினர்... இதனால் திமுக - அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது...

மோதல்
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிச்சாண்டியை மாற்ற வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி தலைமையில் திமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே அதிமுகவினரும், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இப்படித்தான் இன்னொரு சம்பவம் இதே திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. பட்டியலின பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. இவரைதான் கிராம மக்கள் மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்துள்ளனர்..

பழங்குடி கிராமம்
ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி கிராமம் உள்ளது.. இது ஒரு மலை கிராமம்.. பழங்குடியினர் இங்கு அதிக அளவு வசித்து வருகின்றனர்.. அந்த ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளும் பழங்குடியினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரினருக்குதான், இடஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது..

இந்துமதி
ஆனால், இந்த முறை நாயக்கனேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. நாயக்கனேரியில் உள்ள 3440 வாக்காளர்களில் 5 பேர் மட்டுமே ஆதிதிராவிடர்கள் உள்ளனர்.. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை, பழங்குடியினருக்கு ஒதுக்கக்கோரி, மலைக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான 9 இடங்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அந்த கிராமத்தில் ஒருவர்கூட வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை..

வாக்குவாதம்
இந்த நிலையில், 9-வது வார்டு பகுதியை சேர்ந்த இந்துமதி என்ற பெண், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.. நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமதனட்டி பகுதியில் தான் வசித்து வருவதாக கூறி அவசர அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. அவரை பார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இருந்தாலும், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, மூச்சிரைக்க ஓடிச்சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்..

பாதுகாப்பு
அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மனு தாக்கல் செய்ய ஓடிவந்த அந்த பெண்ணையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.. பிறகு, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால், பெரும் பரபரரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்ப்பையும் மீறி ஓடிவந்து மனுதாக்கல் செய்த இந்துமதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி உறுதி தந்துள்ளார்.

கடைசி நிமிஷம்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடையும் என்பதாலேயே இந்துமதி ஓடி வந்தார்.. கூடவே அவரது கணவன் பாண்டியனும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஒருகட்டத்தில் ஓட முடியாத இந்துமதியை அவரது கணவர் கையை பிடித்துக் கொண்டு வேகமாக இழுத்து சென்றார்... வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு ஓடி சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு இருக்கையில் உட்கார்ந்தனர். ஓடிவந்ததால் மூச்சு வாங்கியபடி மனுதாக்கல் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்... அவர்களை அங்கிருந்த அதிகாரி ஆசுவாசப்படுத்தினார்.

வீடியோ
இவர்கள் ஓடிவந்து மனு தாக்கல் செய்வதை அங்கிருந்தோர் வீடியோவாகவும் எடுத்தனர்.. இந்த காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது... மனுத்தாக்கல் முடிந்தபிறகு தம்பதி இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.. பிறகு செய்தியாளர்களிடம் இந்துமதி பேசியதாவது: "நான் நாயக்கனேரி ஊராட்சி பகுதியில் உள்ள காமனூர்தட்டு பகுதியிலுள்ள பாண்டியன் என்ற மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன்.

பேட்டி
அவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தேர்தல் ஆணையம் நாயக்கனேரி ஊராட்சி பகுதிக்கு ஆதிதிராவிடர் பெண் போட்டியிட அறிவித்ததால் நான் போட்டியிட முயற்சி செய்தேன்... அதை தடுப்பதற்காக கிராம மக்கள் தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்தனர்.. எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் நான் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன்...

பரிசீலனை
அதையும் எனக்கு கொடுக்க கூடாது என்று நேற்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புகார் மனு கொடுத்தனர். இப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் நான் அந்த பதவிக்கு போட்டியிட மனு அளித்துள்ளேன்... ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றுவேன். நாளை மனு பரிசீலனை செய்யப்பட்டு அதிகாரிகள் முடிவை அறிவிப்பார்கள்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications