புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலுக்கு இனி நோ! சலூன் கடைகளுக்கு கடிவாளம்! அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்!
வேலூர் : வேலூரில் பள்ளி மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைஸ் போல தலைமுடியை சீராக வெட்டாத சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிக்குச் செல்லும் போது காதுகளில் கம்மலை மாட்டிக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டு, முடியில் கலரிங் செய்து வலம் வருகின்றனர்.
நில நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் காதில் போட்டிருந்த தோடுகளைக் கழட்டச் சொல்லியும், அந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை சொல்லியும் அனுப்பிவைத்து வருகின்றனர். ஆனால் அதனை மாணவர்கள் கண்டுகொள்ளாமல் சுற்றித் திரிகின்றனர்.

புள்ளிங்கோ ஸ்டைல்
பலமுறை புள்ளிங்கோ ஸ்டைலில் சலூன் கடைக்காரர்கள் முடி வெட்டி, கலர் அடிக்கக்கூடாது. மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் அதனையும் ஒரு சில கடைக்காரர்கள் கண்டு கொள்ளாமல் மாணவர்களின் விருப்பத்திற்கேற்றார் போல் முடி வெட்டி வருகின்றனர்.

ஆட்சியர் எச்சரிக்கை
காரணம் அவர்கள் இஷ்டம் போல் வெட்டாவிட்டால் அடுத்து கடைக்கு வர மாட்டார்கள் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். ஆனால் மாணவர்களின் நலன் மற்றும் பண்பை பாதுகாப்பதில் அனைவருக்குமே பொறுப்புணர்வு இருக்க வேண்டுமென்பதிலும் மாற்றும் கருத்து இருக்கு முடியாது. இந்நிலையில் வேலூரில் பள்ளி மாணவர்களுக்கு புள்ளிங்கோ ஸ்டைஸ் போல தலைமுடியை சீராக வெட்டாத சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சலூர் கடைகள் மீது நடவடிக்கை
வேலூரில் பள்ளிகள் ஆய்வு செய்த ஆட்சியர் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,: சீருடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவைகள் மாணவர்கள் ஒரே மாதிரியாக வரவேண்டும். அதற்காக சலூன் கடைகாரர்கள் மற்றும் தையல்காரர்களை அழைத்து அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் கட்டாயம் இதனை கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் பாராட்டு
மாணவர்களுக்கு தலை முடியை சீராக வெட்டாத சலூன் கடை காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஏற்கனவே வேறு விதமாக முடிவெட்டிக் கொண்டவர்களுக்கு இலவசமாக முடியை திருத்தி வெட்டவேண்டும். அரசு வழங்கும் சீருடைகளை மாற்றி முழங்கால் தெரியும் வரை தைத்துக் கொடுக்கும் டைலர் கடை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அவரது இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சலூன் கடைகள் மீது ஒட்டுமொத்த பழியையும் போடாமல் பெற்றோர் பிள்ளைகள் நடை உடை பாவனைகளை கவனிக்க வேண்டியதும் அவசியம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications