தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்? வேலூரில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்.. என்னென்ன ரூல்ஸ்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம், பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் கொரானா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி, வழக்கறிஞர்கள், அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.

Due to the Hike in Corona Virus Cases, Heavy Restirctions imposed in Vellore

இந்த நிலையில் வேலூரில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்களில் ஏசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+