கர்நாடகாவுக்கு சவால் விட விரும்பவில்லை.. உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது - துரைமுருகன்
வேலூர்: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு போட்டி போட்டி சவால்விட்டு சொல்ல விரும்பவில்லை எனவும், மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் கர்நாடக அரசின் கோரிக்கைக்கு உடன்படமாட்டார்கள் என நம்புவதாக தமிழக நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Recommended Video
வேலூரில் தமிழகத்திலேயே முதல்முதலாக ரோபோ மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் முறையை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். இதே போல் வலிப்பு நோய் கண்டறியும் மருத்துவ பிரிவை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்.

இவ்விழாவில் மருத்துவமனையின் இயக்குநர் சம்பத், துணைதலைவர் அனிதா சம்பத் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் அரியூர் தங்க கோவில் வளாகத்தில் வித்யா நேத்ரம் என்றழைக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கினார்
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக முதல்வர் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கூறுவதற்கு உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் கர்நாடக அரசுக்கு உடன்படாது என நாங்கள் திடமாக நம்புகிறோம் எனவும், நாங்கள் கர்நாடகாவுக்கு போட்டி போட்டி சவால்விட்டு சொல்ல விரும்பவில்லை எனவும், மத்திய அரசு நீர்வளத்துறைக்கு ஒதுக்கிய நிதி இன்னும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை ஆனாலும் மழையால் சேதமடைந்த ஏரிகள் நீர்நிலைகளை விரைவில் புணரமைக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications