நாட்டுல ரெண்டே ரெண்டு அறிவாளிகதான்.. இன்னும் 40 வருசத்துக்கு அவங்கதான்.. - ஒரே போடாக போட்ட ராதாரவி!
விருதுநகர் : நாட்டில் இரண்டே இரண்டு அறிவாளிகள் மட்டுமே, ஒருவர் பிரதமர் மோடி, மற்றொருவர் மத்திய அமைச்சர் அமித் ஷா என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் என பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்றும் உலகம் முழுவதும் இருக்கும் அத்தனை தமிழர்களும் போற்றக்கூடிய ஒரு தமிழர் என்றால் அது அண்ணாமலை தான் என்றும் அவர் பேசியுள்ளார்.

பாஜக கூட்டம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். திருச்சுழி தொகுதி பொறுப்பாளர் விஜயரகுநாதன், பொதுச் செயலாளர்கள் சீதாராமன், அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார்.

ராதாரவி
இந்தக் கூட்டத்தில் திரைப்பட நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான ராதாரவி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் அத்தனை தமிழர்களும் போற்றக்கூடிய ஒரு தமிழர் என்றால் அது அண்ணாமலை தான். பாஜக மட்டும்தான் இன்று சுத்தமான ஒரே கட்சி. அப்படி இல்லையென்றால் திராவிடத்திலேயே இருந்த நான் இங்கு வருவேனா?

2 அறிவாளிகள் தான்
கறுப்பு பலூன் விட்டீர்கள், மோடியே திரும்பிப் போ என கோஷமிட்டீர்களே.. திரும்பி வந்தாரே வீரனாக. நாட்டில் இரண்டே இரண்டு அறிவாளிகள் மட்டுமே உள்ளனர். ஒருவர் பிரதமர் மோடி, மற்றொருவர் மத்திய அமைச்சர் அமித் ஷா. இந்தியாவில் இன்று பிரதமர் மோடி சொல்வதுதான் சட்டம். உலகமே அவர் சொல்வதை கேட்கிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி
கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு மத்திய பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும்.

அடுத்த 40 ஆண்டுகளுக்கு
எனக்குத் தெரிந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக தான் ஆளும். என்ன 40 வருடங்கள் டெல்லியில் எனச் சொல்கிறேன் என நினைக்காதீர்கள். எனக்கு சுயநலம். நம்மால் அவ்வளவு காலம் தான் அதிகபட்சமாக இருக்க முடியும்" எனப் பேசினார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!












Click it and Unblock the Notifications