அட பாவமே! அன்று ஆப்கன் அமைச்சர்.. இன்று இரவு பகல் பார்க்காமல் டாக்ஸி ஓட்டும் டிரைவர்! யார் தெரிகிறதா
வாஷிங்டன்: ஆப்கன் நாட்டில் ஒரு காலத்தில் அமைச்சராக இருந்தவர், இப்போது அமெரிக்காவில் தினசரி உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கன் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் இருந்த அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக வெளியேறியது.
அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதுமே, தாலிபான்கள் மீண்டும் ஆப்கன் நாட்டை கைப்பற்றத் தொடங்கினர். வெறும் சில நாட்களில் ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.

கால் டேக்ஸி ஓட்டுநர்
இதன் காரணமாக முந்தைய அஸ்ரப் கானி அரசில் இருந்த பலரும் ஆப்கன் நாட்டில் இருந்து வெளியேறி விட்டனர். இந்நிலையில் ஆப்கான் முன்னாள் நிதியமைச்சராக இருந்த காலித் பயெண்டா என்பவர் தற்போது வாஷிங்டனில் கால் டேக்ஸி ஓட்டுநராக பணிபுரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தாலிபான்கள் ஆப்கான் தலைநகர் காபூலை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் காலித் பயெண்டா அவருடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

150 டாலர்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் இந்த காலித் பயெண்டா, அமைச்சராக இருந்த போது, அவர் 6 பில்லியன் டாலருக்கு பட்ஜெட் சமர்ப்பித்திருந்தார். ஆனால் இப்போது வெறும் 150 டாலர் வருமானத்திற்காக இரவு பகல் பார்க்காமல் கால் டேக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவுக்கு வந்த பிறகு தான், குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடிவதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அமெரிக்காவில் தங்க முறையான வீடு கூட இல்லை என்றும் இது போன்ற வேலைகளைச் செய்தே தனது குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் காலித் தெரிவித்தார்.

வேதனை
ஆப்கன் முன்னாள் நிதியமைச்சராக இருந்த காலித் பயேண்டாவுக்கு தனது குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ள இந்த வேலை மட்டும் போதவில்லை. இதனால் அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வால்ஷ் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் துணைப் பேராசிரியராகவும் பகுதி நேரத்தில் பணியாற்றி வருகிறார். ஆப்கனில் இப்போது நடக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆப்கானை மீண்டும் கட்டமைப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் தான் தோல்வியின் ஒரு அங்கமாக இருந்தது வேதனையாக உள்ளதாகவும் காலித் தெரிவித்தார்.

தேவையானதை செய்யவில்லை
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனை மீண்டும் கட்டமைக்க உதவுவோம் என அளித்த வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்றவில்லை. அமெரிக்காவின் நோக்கங்கள் நல்லதாக இருந்து இருந்து இருக்கலாம் என்றும் இருப்பினும் ஆப்கனில் முடிந்த விதம் அமெரிக்காவுக்கு நிச்சயம் ஏமாற்றத்தையே அளித்து இருக்கும். நாங்கள் நகர்ப்புறங்களில் ஆப்கனை வளர்த்தெடுத்தோம் என்று குறிப்பிட்ட அவர், அது விரைவாகத் தாலிபான்களிடம் விழுந்துவிட்டது என்றும் கிராமப்புறங்களில் தேவையான நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டது உண்மை தான் என்றும் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications