Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ஸ்மார்ட்டுங்க.. ரூ.1.73 கோடி மருத்துவ பில்லை ரூ.30 லட்சமாக குறைத்த ஏஐ.. ஹே எப்புட்றா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். வெறும் 4 மணிநேர சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.1.73 கோடியை பில்லாக கொடுத்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அந்த குடும்பம் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பில்லில் இருந்த மோசடியை கண்டுபிடித்து வெறும் ரூ.30 லட்சமாக குறைத்தது. இது தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு அடுத்தடுத்து பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஏஐ என்பது ஐடி துறை ஊழியர்களுக்கு எமனாக மாறி உள்ளது. பலரது வேலைகளை ஏஐ பறித்து வருகிறது. இது சோகமான விஷயம்.

Artificial Intelligence us medical bill

அதேவேளையில் ஏஐ பயன்பாடு என்பது வேலைகளை விரைவாக செய்து கொடுக்கிறது. இது நல்ல விஷயம். இப்படியான சூழலில் தான் தற்போது ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. ரூ.1.73 கோடிக்கு வந்த மருத்துவ பில்லை வெறும் ரூ.30 லட்சமாக குறைத்துள்ளது ஏஐ. ஆம், நீங்கள் படித்தது உண்மை தான். என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 4 மணிநேரம் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு துரதிர்ஷ்டவசமாக அவரது உயிர் பிரிந்தது. இதனால் அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது. கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியிருந்தபோது தான் மருத்துவமனை நிர்வாகம் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதுதான் மருத்துவமனை பில். வெறும் 4 மணிநேர சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் 1,95,000 அமெரிக்க டாலரை பில் போட்டு வழங்கியது. இந்திய மதிப்பில் ரூ.1.73 கோடியாகும். இதனால் சோகத்தில் இருந்த குடும்பம் பேரதிர்ச்சி அடைந்தது.

எப்படி இவ்வளவு தொகை மருத்துவ பில்லாக வரும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் கேட்டனர். அப்போது மருத்துவ காப்பீடு முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. இதனால் மருத்துவ காப்பீட்டை பயன்படுத்த முடியாது. மேலும் ஒவ்வொரு சிகிச்சைக்குமான மொத்த தொகை மருத்துவ பில்லிலேயே இடம்பெற்றுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனாலும் அந்த குடும்பத்தினரின் மனம் அந்த பில்லை ஏற்க மறுத்தது.

இதற்கிடையே தான் இறந்தவரின் உறவினர் ஒருவர் அந்த பில்லை ஏஐ பயன்படுத்தி பரிசோதிக்க முடிவு செய்தார். அவர் Claude எனும் ஏஐ-யின் சாட்போட்டை பயன்படுத்தினார். அப்போது பில்லில் இருந்த பிழைகளை அந்த ஏஐ கண்டுபிடித்து வழங்கியது. ஒரே சிகிச்சைக்கு 2 முறை பில் கட்டணம் போடப்பட்டு இருந்தது உள்பட பல்வேறு பிழைகளை சுட்டிக்காட்டியது. இதனால் மருத்துவமனை தங்களிடம் மோசடி செய்ய முயன்றதாக அந்த குடும்பத்தினர் நினைத்தனர்.

இதனை அந்த குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்து கூறினர். மேலும் ஏஐ சுட்டிக்காண்பித்த பிழை மற்றும் டபுள் என்ட்ரி உள்ளிட்டவற்றை எடுத்து கூறினர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தனது தவறை ஒப்புக்கொண்டு மாற்று பில்லை ரூ.30 லட்சத்துக்கு வழங்கியது. இதன்மூலம் அந்த குடும்பம் ரூ.1.43 கோடியை மிச்சப்படுத்தியது. இதற்கு ஏஐ தான் உதவியது. தற்போது இந்த செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+