21 நூற்றாண்டில் இது நடக்கலாமா.. உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு.. வெளியான பகீர் அறிக்கை
வாஷிங்டன்: உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு நிகழ்வதாகவும், ஒரு நாளைக்கு 19,700 பேர் பட்டினியால் பலியாவதாகவும் 200-க்கும் மேலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. பூமியில் இருந்தபடி வேற்று கிரகத்தை ஆய்வு செய்யும் அளவுக்கு மனித சமூகம் வளர்ந்துவிட்டது.
கற்பனையில் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு விஞ்ஞானமும் அதை சார்ந்த பொருளாதாரமும் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

பட்டினிச்சாவு
ஆனால் இந்த நவீன கால காட்டத்தில் இன்னமும் பட்டினிச்சாவு நிகழ்கிறது என்பது இன்னும் சமூகத்தின் அவலமாக தொடர்வது வேதனையான விஷயமாகவே உள்ளது. அதுவும் 4 நொடிகளுக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பதாக வெளியாகியிருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 75 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ) இது தொடர்பான ஒரு எச்சரிக்கையையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது
அதில், கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில் 345 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு எண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உலக தலைவர்கள் உறுதி அளித்த நிலையிலும், சோமாலியாவில் இப்போதும் பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. உலக முழுவதும் சுமார் 45 நாடுகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் உள்ளனர்.

ஒரு நாளைக்கு 19,700 பேர் பலி
ஒவ்வொரு நாளும் சுமார் 19,700 பேர் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நான்கு நொடியிலும் ஒருவர் பட்டினியால் உயிரிழக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும். விவசாயம் மற்றும் அறுவடைகள் என விவசாயத்துறையிலும் அனைத்து தொழில்நுட்ப யுக்திக உள்ள இன்றைய கால கட்டத்திலும் 21 ஆம் நூற்றாண்டில் இப்போதும் நாம் பஞ்சத்தை பற்றி பேசுவது மிகவும் துயரமானது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தாமதிக்கக் கூடாது
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு என்.ஜி.ஓ அமைப்புகளில் ஒன்றான ஏமனில் உள்ள குடும்ப பராமரிப்பு சங்கத்தை சேர்ந்த மோகன்னா அகமது அலி எல்ஜப்லி என்பவர் கூறுகையில், ''இந்த விவகாரம் ஒரு நாட்டைப்பற்றியதோ, ஒரு கண்டத்தை பற்றியதோ மட்டும் கிடையாது. பட்டினிக்கு ஒரு காரணம் மட்டும் இருக்காது. இது ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குமான அநீதியாகும். உடனடியாக உயிர்காக்கும் உணவுகளை வழங்குவது மற்றும் நீண்ட கால உதவி அளிப்பதில் ஒரு கணம் கூட நாம் தாமதிக்கக் கூடாது'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications