21 நூற்றாண்டில் இது நடக்கலாமா.. உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு.. வெளியான பகீர் அறிக்கை
வாஷிங்டன்: உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு நிகழ்வதாகவும், ஒரு நாளைக்கு 19,700 பேர் பட்டினியால் பலியாவதாகவும் 200-க்கும் மேலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. பூமியில் இருந்தபடி வேற்று கிரகத்தை ஆய்வு செய்யும் அளவுக்கு மனித சமூகம் வளர்ந்துவிட்டது.
கற்பனையில் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு விஞ்ஞானமும் அதை சார்ந்த பொருளாதாரமும் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

பட்டினிச்சாவு
ஆனால் இந்த நவீன கால காட்டத்தில் இன்னமும் பட்டினிச்சாவு நிகழ்கிறது என்பது இன்னும் சமூகத்தின் அவலமாக தொடர்வது வேதனையான விஷயமாகவே உள்ளது. அதுவும் 4 நொடிகளுக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பதாக வெளியாகியிருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 75 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ) இது தொடர்பான ஒரு எச்சரிக்கையையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது
அதில், கூறப்பட்டு இருப்பதாவது:- உலக அளவில் 345 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு எண்ணிக்கை இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உலக தலைவர்கள் உறுதி அளித்த நிலையிலும், சோமாலியாவில் இப்போதும் பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. உலக முழுவதும் சுமார் 45 நாடுகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் உள்ளனர்.

ஒரு நாளைக்கு 19,700 பேர் பலி
ஒவ்வொரு நாளும் சுமார் 19,700 பேர் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நான்கு நொடியிலும் ஒருவர் பட்டினியால் உயிரிழக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும். விவசாயம் மற்றும் அறுவடைகள் என விவசாயத்துறையிலும் அனைத்து தொழில்நுட்ப யுக்திக உள்ள இன்றைய கால கட்டத்திலும் 21 ஆம் நூற்றாண்டில் இப்போதும் நாம் பஞ்சத்தை பற்றி பேசுவது மிகவும் துயரமானது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தாமதிக்கக் கூடாது
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு என்.ஜி.ஓ அமைப்புகளில் ஒன்றான ஏமனில் உள்ள குடும்ப பராமரிப்பு சங்கத்தை சேர்ந்த மோகன்னா அகமது அலி எல்ஜப்லி என்பவர் கூறுகையில், ''இந்த விவகாரம் ஒரு நாட்டைப்பற்றியதோ, ஒரு கண்டத்தை பற்றியதோ மட்டும் கிடையாது. பட்டினிக்கு ஒரு காரணம் மட்டும் இருக்காது. இது ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குமான அநீதியாகும். உடனடியாக உயிர்காக்கும் உணவுகளை வழங்குவது மற்றும் நீண்ட கால உதவி அளிப்பதில் ஒரு கணம் கூட நாம் தாமதிக்கக் கூடாது'' என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications