"எச்சரிக்கை தேவை.!" இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதிகள்! அமெரிக்கா கொடுத்த பரபர வார்னிங்
வாஷிங்டன்: இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது
இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் சென்று வருகின்றனர்.
அதேபோல அமெரிக்காவில் இருந்தும் குறிப்பிட்ட அளவில் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பயணிகள் வருகின்றன. இந்தச் சூழலில் அமெரிக்கா புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது.

எச்சரிக்கை
அதிகரிக்கும் குற்றச் சம்பங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இப்போது இந்தியாவை அமெரிக்கா லெவல் 2இல் வைத்து உள்ளது. அமெரிக்கா வெளியிடும் எச்சரிக்கையில் 4 லெவல் உள்ளன. அதில் லெவல் நாட்டில் உள்ளது மோசமான நாடாகும்..

கிரைம்
பாகிஸ்தான் இதில் லெவல் 3இல் இருக்கிறது. பயங்கரவாதம் மற்றும் மதவெறி வன்முறை காரணமாகப் பாகிஸ்தான் செல்லும் அமெரிக்கக் குடிமக்கள் தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில் தான், இந்தியா பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. குற்றம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இந்தியா வரும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பலாத்கார சம்பவம்
அமெரிக்க வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் (கிழக்கு லடாக் மற்றும் லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்களிலும் பிற இடங்களிலும் அதிகமாக நடக்கிறது.

தாக்குதல் நடத்தாலம்
சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலர்களைக் குறிவைத்து எவ்வித எச்சரிக்கையுடன் இல்லாமல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். கிழக்கு மகாராஷ்டிரா, வடக்கு தெலுங்கானாவில் இருந்து மேற்கு வங்கம் வரை இருக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசரக்கால உதவிகளை அதிகம் வழங்க முடியாது. ஏனென்றால் இந்த பகுதிகளுக்குச் செல்ல அமெரிக்க அதிகாரிகள் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

வழக்கமான ஒன்றுதான்
அமெரிக்கா ஒரு நாட்டில் இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். இருப்பினும், இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரிக்கும் கிரைம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications