ஜெய்ப்பூர் இலக்கிய விழா: 8ஆம் நாள் நிகழ்வுகள் என்ன? முழு தகவல்
15ஆவது ஆண்டாக நடைபெறும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா 8ஆவது நாள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது, இதில் இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு மரண அடியை வழங்கிய ராயல் இந்தியக் கடற்படையின் கலகம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளில் பல முக்கிய பேச்சாளர்கள் பேச உள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகளாக இந்தியா மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பான துணிச்சலான, உறுதியான மற்றும் பாராட்டப்பட்ட தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர் ரோலி புக்ஸின் நிறுவனரும் வெளியீட்டாளருமான பிரமோத் கபூர். இவர் வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கெஸ்னூர், நியூஸ் 9+ எடிட்டர் சந்தீப் உன்னிதன் ஆகியோருடன் தனது 1946: Naval Uprising That Shook the Empire புத்தகம் குறித்து விவாதிக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள Deccan: Southern India from the Chalukyas to the Cholas புத்தகத்தின் எழுத்தாளர் அனிருத் கனிசெட்டி, ரெபெல் சுல்தான்கள்: தி டெக்கான் ஃப்ரம் கில்ஜி டூ சிவாஜி, தி ஐவரி த்ரோன்: க்ரோனிகல்ஸ் ஆப் திருவிதாங்கூர் உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய மனு எஸ்.பிள்ளையுடன் உரையாடுகிறார்.
Kanisetti's Lords of the Deccan:சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரையிலான தென்னிந்தியா, இடைக்கால தென்னிந்தியா மற்றும் சமகால அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் அதன் தாக்கம் பற்றிய அவரது சிந்தனை மிக்க ஆய்வு அவரது திறமைக்குச் சான்றாகும். அவர் இடைக்கால அரசியல் சக்தி, உலகமயமாக்கல் மற்றும் இடைக்காலத்தில் தெற்கின் துடிப்பான கலாசாரம் ஆகியவற்றை ஆராய்கிறார். அதேசமயம், மனு எஸ் பிள்ளை இடைக்கால டெக்கன் வரலாற்றில் விரிவான ஆய்வு செய்துள்ளார். இந்திய தலைவிதியை மாற்றி அமைக்கும் முக்கியமானது இது.
புகழ்பெற்ற எழுத்தாளரும், உயிர்வேதியியல் நிபுணருமான பிரனய் லால், தனது இன்விசிபிள் எம்பயர் புத்தகத்தில் வைரஸ்களின் உலகத்தைப் பற்றிய எளிதாக நமக்கு புரியும்படி எழுதியவர். இவர் கல்வியாளர், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுத்தாளர் அம்பரீஷ் சாத்விக் அவர்களுடன் உரையாடுகிறார். நமது வாழ்க்கைக்கு உதவுவது முதல் பேரழிவு நோய்களை ஏற்படுத்துவது வரை சிறு வைரஸ் மனிதக்குலத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.
இந்தியா ஒரு பன்மொழி தேசம், இங்கு நிலையான மற்றும் தொடர்ச்சியான மொழிபெயர்ப்பு நடந்து கொண்டே தான் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் புலமை பெற்ற நான்கு எழுத்தாளர்கள், தங்கள் தாய்மொழிகளுக்கும் கற்ற மொழிகளுக்கும் இடையிலான மாறுபாட்டை விலக்குகின்றனர். மேலும் அவர்களின் படைப்பாற்றல் இரண்டு மொழிகளில் எப்படி மாறுகிறது என்பதையும் விளக்குகின்றனர். இதில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் கவிதைகள் எழுதும் கவிஞரும் கல்வியாளருமான அகில் கத்யாலின், ஆங்கிலம் மற்றும் பங்களா இரண்டையும் ஒருசேரப் பார்க்கும் குணால் பாசு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் அனுக்ருதி உபாத்யா, தனுஜ் சோலங்கி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் தங்கள் ஒழுக்கம், எழுதும் செயல்முறை மற்றும் மொழியியல் மற்றும் இலக்கியம் குறித்துப் பேச உள்ளனர்.
இந்தியாவின் மகாராஜாக்கள் அற்பமானவர்கள், பொது நன்மைகளை விட தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள், பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு அடிபணிந்த திறமையற்ற தலைவர்கள் என்ற எண்ணம் நீண்ட காலமாகப் புழக்கத்தில் உள்ளது. False Allies: India's Maharajahs in the Age of Ravi Varma என்ற தனது புத்தகத்தில் வரலாற்றாசிரியரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான மனு எஸ்.பிள்ளை புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் பயணங்களின் மூலம் இதை விளக்குகிறார். An Era of Darkness: The British Empire in India மற்றும் Inglorious Empire: What the British Did to India புத்தகங்களை எழுதிய சஷி தரூர், தனது புதிய Battle Of Belonging: On Nationalism, Patriotism புத்தகத்தில் இந்தியா சந்திக்கும் சமகால பிரச்சினைகளை விளக்குகிறார். மனு எஸ்.பிள்ளை, சசி தரூர், எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான இரா.முக்கோட்டி முக்கிய தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.
7ஆம் நாள் நிகழ்வுகள்
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் இன்றைய தினம் பல முக்கிய அமர்வுகளில் பலதரப்பட்ட பேச்சாளர்கள் வித்தியமான தலைப்புகளில் கொடுத்த உரையாடல் பன்முகத்தன்மை பொருந்தி இருந்தது. இலக்கியத் தொடருக்கான ஜேசிபி பரிசுக்கான அமர்வில், பத்திரிகையாளர் லிண்ட்சே பேரிரார், எழுத்தாளர் ரிஜுலா தாஸ், எழுத்தாளர் ஷபீர் அஹ்மத் மிர் மற்றும் எழுத்தாளர் தரிபா லிண்டேம் எழுத்தாளர் கருணா எசரா பாரிக் உடன் உரையாடினர். இந்த அமர்வில் அவர்கள் தங்கள் முதல் நாவல்களின் அற்புதமான அனுபவங்களைப் பற்றி விவாதித்தனர்.
காலை அமர்வை யோகா பயிற்சியாளர் சுமித் தல்வால், தொடங்கினார். அவர் சில சுவாசப் பயிற்சிகளையும் கற்று கொடுத்தார். "காலை இசை" நிகழ்வு புகழ்பெற்ற கிளாசிக்கல் பாடகர் ஆஸ்தா கோஸ்வாமியால் நிகழ்த்தப்பட்டது. தபேலா மற்றும் ஹார்மோனியத்தின் கலவையுடன் அவர் தனது இசைத் தொகுப்பைத் தொடங்கினார். இலக்கிய விழாவுக்கு இது பொருத்தமான தொடக்கமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற நடிகரான மனோஜ் பாஜ்பாய், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் 15ஆவது விழாவில் பங்கேற்று, தேசிய விருது பெற்ற புத்தகமான RD Burman: The Man புத்தகத்தை எழுதிய பாலாஜி விட்டல் மற்றும் பிரக்யா திவாரி ஆகியோருடன் உரையாடலில் நடத்தினார்.