மனோரஞ்சிதம் பூ தரும் மகிழ்ச்சி.. இரவில் மட்டுமே மலர்ந்து மணம் பரப்பும் மகிமையான மனோரஞ்சிதம் பூக்கள்
சென்னை: ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது.. அந்தவகையில், பூஜைகளில் தெய்வத்துக்கு சூட்டப்படும் சிறப்பு மலர்கள் சிலவற்றை பார்ப்போம். அதிலும் ஆன்மீகத்தில், மனோரஞ்சிதம் மலர்களுக்கான முக்கியத்துவம் என்னென்ன தெரியுமா?
பவளமல்லி பூக்களுக்கு மருத்துவ குணங்களும் உண்டு.. தொற்றுநோயை குணமாக்கக்கூடிய ஆற்றல் இந்த பூக்களுக்கு உண்டு. அதேபோல, பூஜைகளில் பவளமல்லியை வைப்பதால், அதிக நறுமணம் வீடுமுழுக்க வீசும்.. இரவு மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பவளமல்லி பூவானது, இரவு முழுவதும் தன்னுடைய மணத்தை பரப்பி கொண்டேயிருக்கக்கூடியது.

கண் திருஷ்டி: பிரம்மனின் மறு உருவமாகவே கருதப்படும் இந்த பவளமல்லி கண் திருஷ்டியை போக்கக்கூடியது.. பிரம்மகமலத்தை வழிப்பட்டால் அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பார்கள்.
கிருஷ்ணரால் பூமிக்கு கொண்டு வரப்பட்டதே பவளமல்லி என்பார்கள். அதனால்தான் இதற்கு தேவலோகத்து மலர் என்று சிறப்பு பெயர் உண்டு.. பவளமல்லி திருமாலுக்கு மிகவும் பிடித்த மலராகும். இந்த பூ திருமாலுக்கு மிகவும் பிடித்தமான பூ இதுவாகும்.. வாசனையுள்ள இந்த பூக்களை வீட்டில் வைப்பதாலும், பூஜைகளுக்கு பயன்படுத்துவதாலும், குறையாத செல்வ செழிப்பு ஏற்படும்..
மருத்துவ நன்மை: மனோரஞ்சிதம் பூக்களை பொறுத்தவரை, வாசனையுடன் சேர்த்து மகிழ்ச்சியையும் பரப்பக்கூடியது.. ஆரோக்கியத்தையும், நன்மையையும் அள்ளித்தரக்கூடியது.. தேவர்கள் இறைவனை மனோரஞ்சித மலர்களால் தான் பூஜிப்பார்களாம். தொழில் செய்யும் இடத்தில் இந்த பூக்களை வைப்பதால் நல்ல லாபமும், முன்னேற்றமும் பெறலாம்.. தீராத கடன் பிரச்னைகள் தீரும்.. பூஜைகளில் வைத்து வழிபட்டால் மனக் கஷ்டங்கள் நீங்கும்.. அதிலும் வெள்ளிக்கிழமையில் பூக்களை கொண்டு பூஜிப்பது கூடுதல் சிறப்பு.
மனோரஞ்சிதம் பூக்களில் எளிய பரிகாரம் ஒன்றையும் செய்வார்கள்.. இதனால் குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்கும்.. இந்த பரிகாரத்துக்கு, மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, சிறிய பச்சை கற்பூரத்தை தூளாக்கி சேர்த்து, பஞ்சுத் திரி போட்டுத்தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு பக்கத்தில் மனோரஞ்சித பூவை வைத்து, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். இறுதியாக தீப தூப கற்பூர ஆராதனை செய்துவிடலாம். இப்படி ஒருவாரம் முழுக்க இந்த பூஜையை செய்யலாம்.
வெள்ளைத்துணி: மனோரஞ்சிதம் பூ காய்ந்துபோனாலும், அதை தூக்கி எறியாமல், ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சு கட்டி வைத்துவிடவேண்டும்... இப்படி 3 மாதத்துக்கொரு முறை புதிய பூக்களை வைக்கலாம். முடிச்சி கட்டியிருக்கும் பழைய பூக்களை கால் படாத இடத்தில் போட்டுவிடலாம்.












Click it and Unblock the Notifications